(Reading time: 7 - 14 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

கோப தீக்கு எண்ணெய் ஊற்றியது போல இருந்தது.

தன் விழிகளை தாழ்த்தி கொண்டவளின் முகத்தை நிமிர்த்தி தன் முகத்தை நேராக பார்க்க வைத்தான். ஆனால் அவளோ அவனை பார்க்க விரும்பாதவளாய் கண்களை மூடிக் கொள்ள அவள் முகத்தருகே குனிந்தான்.

எத்தனை கோபம் இருந்தாலும் தன்னை அணைத்து வைத்திருப்பது தன் மனங்கவர்ந்தவனல்லவா... அவனின் சந்தேக வார்த்தைகள் காயப்படுத்தியதால் அவள் கோபத்தை காட்டியது உண்மையாயினும் அவன் அருகாமை பெண்ணவளுக்குள் ஹார்மோன் மாற்றங்களை தூண்ட அதனால்தான் அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.

ஆனால் அவனோ இப்போது அவள் முகம் நோக்கி குனிவது கண்களை மூடி இருந்த அவளுக்குள் ஏராளமான ரசாயன மாற்றங்களை உருவாக்க அவள் தன் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டாள். இதுவரை அவனை தள்ளி விட போராடிய அவள் கைகள் இப்போது தன் நடுக்கத்தை மறைத்து கொள்ள ஆதரவாக அவனைப் பற்றி கொண்டது.

அவள் கால்கள் தரையோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொள்ள விழுந்து விடுவமோ என்ற அச்சத்தில் நிலத்தில் தடம் பதிக்க முயல வேர்வை துளிகள் அவள் மீது ஊர அவன் கைக்குள் அடங்கி இருந்த மொத்த உடலும் நடுங்க ஆரம்பித்தது.

அவள் உடல் நடுங்கத்தை புரிந்து கொண்டவன் அவளை தன் கை அணைப்பில் இருந்து மெதுவாக விடுவித்தவன், இத்தனை நாள் பிடித்து இருந்த என்னை இன்று மட்டும் பிடிக்காமல் போய் விட்டதோ... நிமிடத்திற்கு ஒரு முறை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்க வைக்கும் நான் இன்று உன்னை அருவருக்கத்தக்க மாறிப் போய் விட்டேனோ... நான் வரும் நேரத்திற்காக காத்திருந்து, ஜன்னல் ஓரம் நின்று என்னையே கண்ணிமைக்காமல் பார்க்கும் உனக்கு உன்னை தேடி ஓடி வந்த நான் விரும்பத்தகாதவனாக போய் விட்டேனோ... கண் விழித்த நேரத்தில் இருந்து கண் மூடி உறங்கும் வரை எனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த நீ, இன்று எவனோ ஒருத்தனுக்காக என்னை வெறுக்கிறாயா...

அப்படி என்றால் இவ்வளவு நாள் நீ நடித்த நாடகத்தை நான் கூட நம்பி முட்டாளாகி விட்டேனா... என்னை ஏமாற்ற துணிந்து விட்டாயா... உன்னை என்றவன் அவளது கழுத்தை பிடித்து அழுத்த, அவள் முகம் வலியில் சுருங்கியது. ஆனால் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்யாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இத்தனை நேரம் அவன் பேசிய வார்த்தைகளை உணர்ந்து தான் பேசினானா என்று அவனையே பார்க்க... தன் செயலில் திடுக்கிட்டவன் அவளை விட்டு விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

எது எப்படியோ இப்போதாவது அவள் நடிக்கும் நாடகம் புரிந்ததே.... சகலகலாவல்லி இவள்...

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.