(Reading time: 8 - 15 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 08 - தனுசஜ்ஜீ

கார் மிதமான வேகத்தில் செல்ல கதிர் எஃப் எம் ஐ ஆன் செய்தான்.

இளையராஜா இருவரின் உணர்வுகளுக்கும் உயிர் தந்தது போன்ற பாட்டுகள். இருவரும் தங்களை மறந்து இசையில் மூழ்கி முத்துக்குளித்துக்கொண்டிருந்தனர்.   கார் நேராக சென்று நின்றது கதிரின் வீட்டில், இசையில் மூழ்கி இருந்தவள் திடீரென்று கார் நிற்கவும். கதிரை ஏறிட்டாள்.

அவன் ஒன்றும் கூறாமல் காரை விட்டு இறங்கவும்.

தடிமாடு, தடிமாடு கேட்டாதான் பதில் சொல்வாரோ???

இடையில் கதிருக்கு கால் வர, அதை அட்டன் செய்து காதில் வைத்தான்.

எதிர்முனையில் கார்த்திக்,

மச்சி எங்க இருக்க???

வீட்டுக்கு வந்துட்டேன்டா...

அனிதா.....

என் கூட தா இருக்காடா...

கதிர் இப்பவும் சொல்றேன் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் டா.

நீ சொன்னதுக்கு நான் ஓகே சொன்னேன்ல இதுதான் என்னோட லாஸ்ட் டெஸ்ட் இது மட்டும் சக்சஸ்   ஆயிடுச்சின்னா உன் ஆசப்படியும், அம்மா ஆசப்படியும், கல்யாணம் பண்ணிக்கிறேன்.

ஆனா அனிதாவோட நிலைமை.

நான் சொல்லி புரிய வச்சிக்கிறேன் கார்த்திக் நீ கவல படாத...

நீ ரொம்ப அவசரப்படுறனு  தோணுது கதிர்.

என் வாழ்க்கையில இனிமே கஷ்டம் வரக்கூடாதுனா நான் இத செஞ்சுதான் ஆகணும். இது எனக்கும் ஒரு பெரிய வலின்றத  நீ மறந்துறாத கார்த்திக்.

சரி மச்சி ஆனா எனக்கு சுத்தமா இதுல இஷ்டம் இல்ல. உன் லைஃப் நல்லா இருந்தா தான். என் லைஃப் நல்லா இருக்கும் அத மறந்துடாத.

அனிதா காரிலிருந்து இறங்க,

சரி மச்சி அவ வந்துட்டா நான் அப்புறம் பேசுறேன் பாய்....

பாய்.....

ஒரு பெரிய வீட்டின் முன் வண்டி நிற்கவும் .அவனே சொல்லமாட்டான். நாமளே கேட்போம் என்று அனிதா காரை விட்டு இறங்கினாள்.

உள்ள வா என் வீடு தான் என்று கதிர் கூறிவிட்டு உள்ளே செல்ல....

அனிதா வானத்தை அன்னாந்து பார்த்து இன்னக்கி கண்டிப்பா மழை பெய்யும்டா.....என்று அவள்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.