தன்னிலை பெற்றவன். அவள் சென்ற திசைநோக்கி வேகமாக விரைத்தான்.
அவனிடம் ஆவேசமாக பேசியவள். வெளியில் வந்ததும் கண்ணீரை அவளால் கட்டுபடுத்த முடியவில்லை. கண்கள் இரண்டும் ஆறாக அதனை துடைக்க கூட தோன்றாமல் கால் போன போக்கில் யாருமற்ற குழந்தை போல் எந்த இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருந்தாள். காதலுக்காக இனியும் இழக்க என்னிடம் எதுவுமில்லை. இதற்கு மேல் தன்னை யாரும் அசிங்கபடுத்த முடியாது என்ற மன பிதற்றலுடன் நடந்தவளின் கண்ணீர் கண்ணை மறைக்க... எதிரே வந்த சரக்கு லாரி அவளை அடித்து தூக்கியது...
அனிதா........ என்று ஆவேசமாக கதிர் கத்த....
லாரி தூக்கி அடித்ததில் அவன் கார்மேல் வந்து விழுந்தாள் ரத்த வெள்ளத்தில்,
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு பிறந்திருப்பேன்.
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடியவர்கள்: சித்ரா, சீனிவாஸ்
இசை: A.R. ரஹ்மான்
Next episode will be published on 5th Feb. This series is updated weekly on Friday evenings.
தொடரும்