(Reading time: 8 - 15 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

சோபாவில் கால் மேல் கால் போட்டு தன் இரு கையையும் சோபவின் மேல் வைத்து, ராஜ தோரணையுடன் அமர்த்திருந்தான்.அவள் கேட்டதும் அவளை கூர்மையுடன் நோக்கியபடியே என்ன பேபி இதுக்கூட உனக்கு தெரியாதா....

இது டாக்குமென்ட்ஸ் தெரியுது ஆனா ஏன் பேர்ல ஏன் இருக்கு.

அவளை நோக்கி அசத்தலாக சிரித்தவன் இங்க வா பேபி.. அட இங்க வா.....

அவன் அருகில் அவள் வர,

அவள் அருகில் வந்ததும் எழுந்து நின்றவன். என்னோட சொத்துல பாதி உன் பேர்ல எழுதிருக்கேன்.

ஆனால் அவளுடைய முகபாவனை அவன் எதிர்பார்த்தது போல இல்லை மாறாக, எதுக்கு என்றவாரு அவள் தோரணை இருந்தது.

அவளுடைய  இந்த முகபாவனை கண்டவுடனே கதிர் யோசித்திருக்கலாம் விதி யாரை விட்டது. கதிர்க்கு மூதேவி முதுகுல படுத்துட்டா போல .....

இன்னுமா புரில பேபி. இந்த சொத்து எல்லாம் உனக்குதான் பேபி. அதுக்கு பதிலா....

அதுக்கு பதிலா.....

நீ தான் வேனும். உனக்கு நா அடிமை ஆயிட்டேன் பேபி உன் அழகால என்ன கட்டி போட்டுட்ட.... இனிமே உன்ன தொடாம ஒரு நொடிகூட என்னால இருக்க முடியாது. எஸ் என்னோட தேவைக்கு நீ வேணும். லைஃப் ஃபுல்லா..... என்று அவன் மயக்கமாக கூற,

இப்பொழுது அவனை நோக்கி கூர் விழிகளை செலுத்தியவள். யு மீன் உன்னோட வப்பாட்டியா நா இருக்கனும் அம் ஐ கரக்ட்.

எக்ஸாக்ட்லி பேபி.....

அவன் கூறிய அடுத்த நொடி அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள். அவன் கன்னத்தை பிடித்து அதிர்ச்சியாக பார்ப்பதிலே தெரிந்தது.

அவளிடம் இருந்து இந்தவிதமான பதிலடியை அவன் எதிர்பார்க்கவில்லை யென்று,

பொறுக்கி நாயே இந்தா உன்னோட சொத்து என்று பத்திரத்தை கிழித்து அவன் முகத்தில் எரிந்தவள். உன்ன மாறி ஒரு அசிங்கம் புடிச்சவன லவ் பண்ணதுக்கு எனக்கு இது தேவதான்.

     உன்ன லவ் பண்ண ஒரே காரணத்துக்காக உன்ன உயிரோட விடுறேன். அவன் முன்னே சொடுக்கு போட்டு இனி என் முன்னாடி எப்பவும் வந்துறாத.... என்று கம்பீர நடையுடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

     கதிர் சத்தியமாக தன்னவளிடம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அவள் சென்றவுடனும் பிரம்மை பிடித்தவன்போல் அப்படியே நின்றான். எங்கோ ஒலித்த ஹாரனில்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.