(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தெருமுனையில் உயரமாக ஒரு உருவம் தெரிந்தது.

அவன் தான்! அவனே தான்! நெருங்கி வர நெருங்கி வர, தெருவிளக்கு வெளிச்சத்தில் முழுமுகமும் ஏக்கமும் சிறு புன்னைகையும் அவனிடத்தில், வெட்கமும் படபடப்பும் அவளிடத்தில், இதயம் தடக் தடக் என அடிக்க, கைகள் நடுங்கி உடலெல்லாம் சில்லிடுவது போல் ஒரு உணர்வு. இருவரின் கண்களும் ஒரே ஒரு விநாடி நேருக்கு நேர் சந்திந்துப் பிரிய, மனமெல்லாம் சொல்லவியலாத ஓர் பரவசம். இந்த ஒரு வினாடிப் பார்வையே இந்த பிறப்பு முழுவதுக்கும் போதுமென்று தோன்றியது இருவருக்கும். தினேஷ் தெருவின் மறுமுனையில் திரும்பி அவள் கண்களில் இருந்து மறைந்து சென்றுவிட்டான். உயிரே இல்லாமல் வெற்றுடல் மட்டும் வீட்டுக்குள் சென்றதைப் போல் போனாள் ரம்யா. இவ என்ன இப்படி முகம் வெளுத்துப் போய் வர்றா, என்னாச்சு இவளுக்கு என்பது போல் அம்மா பார்க்க, அவளிடம் என்ன அந்த பொண்ணு புக் கொண்டு வரலியா. எவ்வளவு நேரம்மா நிக்கிறது, சத்யாவை நீயே வாங்கிவச்சு என்கிட்டே கொடுன்னு சொல்லப் போறேன்.

சரி அப்படியே சொல்லு! போன் போடப்போறியா!

அந்த பொண்ணு தான் வரவேயில்லியே. அவளே போடட்டும்.

ஒன்றரை மணி நேரம் போனது. திரும்பவும் போன் அடிக்க, ரம்யா தான் அருகில் இருந்ததால் எடுத்தாள்.

“என்னடி அந்த பொண்ணுக்கு வீடே தெரில போல. எவ்வளவு நேரம் நிக்கிறது? நீயே அந்த புக்கை வாங்கிக் கொடுத்திரு! வீட்டுக்குப் பத்திரமா வந்துட்டேல! சரிடி அப்புறம் பாப்போம்! டயர்டா இருப்ப! நிம்மதியாத் தூங்கு! என்றாள்

தினேஷும் ரம்யாவின் பக்கத்தில் அம்மா இருப்பதால் அப்படிப் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, பார்க்கணும்னு ரொம்ப தோணிடுச்சு, உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே.

ஒன்னும் பிரச்சினை இல்லை சத்யா. நீ சாப்பிட்டுத் தூங்கு! குட்நைட்! என போனை வைத்தாள்.

படுக்கையறைக்குள் சென்று படுத்ததும் இருவேறு எண்ணங்கள். தன்னை ஒரு நிமிடம் பார்க்க, ஊரிலிருந்து வரப் போக என மூன்று மணி நேரப் பயணம் செய்யத் தயாராக இருக்கும் தினேஷின் காதலின் வேகம் அவளுக்குப்  பிடித்தது. அதே சமயத்தில், இதே வேகம் ஆபத்தான பாதையில் தங்களைக் கொண்டு சென்றுவிடக் கூடாது என்ற அச்சமும் இருந்தது. படிப்பும் எதிர்காலமும் பாழாகும் விதத்தில் எதுவும் நடக்கக் கூடாது என்ற உறுதியும் வேண்டுமென்று நினைத்தாள்.  இந்த எண்ணத்தோடு, தான் துணிந்து சொல்லும் பொய்கள், எவ்வளவு கோர்வையான பொய்கள், சத்யா என்றொரு உயிர்த்தோழி இருப்பதால் அவளே எல்லாப் பொய்களிலும் கேடயம். அவளே என்றும் தன்னைக் காக்கும் தோழி என்ற நம்பிக்கையில்

4 comments

  • எல்லாரும் எதோ எதோ சீர்வரிசை வாங்கிப்பாங்க. இது மாமனார் கிட்ட இருந்து பெண் பென்சில் தானே விட்ரலாம் :lol: நன்றி தோழி!
  • Fresher party yo :Q: Sathya Peru solliye escape aguranga....ivanga matter parents therinja tin than pole irukku :D interesting updates ma'am 👏👏👏👏👏👏 <br />Ella exams kkum free pen pencil venumakum :grin: nalla flow ma'am 👍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.