(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

சத்யாவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். இந்த பொய்களின் கோட்டை எந்நேரமும் உடைந்து விடலாம். அப்படியாகும் நேரத்தில் அம்மா அப்பாவை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வியும் அச்சமும் தோன்றியது.

எப்படியோ விடுமுறை முடிந்து ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி தொடங்கியதால், இனிமேல் ஒருவரையொருவர் பார்ப்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.  ஒரு மாதத்தில் கண்மணி சற்றே இளைத்திருந்தாள்.

என்ன கண்மணி? கோவிலுக்கு விளக்குப் போடப்போவேன்னு சொன்ன சரி!  நிறைய விரதம் இருந்திருப்ப போலயே? என்று ரம்யா கேட்க.

ஏண்டி சொல்லமாட்ட?

எங்க அம்மா ஸ்கூல் டீச்சர். பனிஷ்மென்ட்லாம் பயங்கரமாத்தான் இருக்கும். கார்த்திக்கிட்ட பேசினதைக் கண்டுபிடிச்சு மூணு நாள் சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. மூணு நாளும் பட்டினி.

அப்பப்போ அவங்க திட்டினதுக்கு கோச்சுட்டு நானும் சரியா சாப்பிடாமல் இருந்தேன். ஆனால் எனக்கு என் வீட்லயும் ஒரு சப்போர்ட் இருக்குன்னா என் அவ்வா (பாட்டி) தான். அம்மா அடிக்கிறதை தடுக்குறதும், நான் பட்டினி கிடந்தா, எப்படியாவது வாயில் கொஞ்சம் சாப்பாட்டை ஊட்டி விட்ருவாங்க. நல்ல அவ்வா

ஏண்டி இப்படி அம்மா உன்னை அடிக்கலாம் செய்றாங்க.

அவங்களுக்கு பிடிக்காததை செய்றதை அவங்களால் ஏத்துக்க முடில அதான்.

என் வீட்ல தெரிஞ்சாலும் என் அம்மா, அப்பா இப்படி அடிப்பாங்களான்னு தெரியல! நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து அடிச்சதே இல்ல!

ஆனால் இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்கன்னு உனக்குத் தெரியாதுல்ல.

ஹ்ம்ம். வர்றப்போ பார்ப்போம்  என்றவாறே அவரவர் வகுப்பு நோக்கி சென்றனர்.

டிபார்ட்மெண்ட் நோட்டிஸ் போர்டில் வகுப்பறை எண்கள் ஓட்டப் பட்டிருந்தன. அதற்குள் இரண்டாம் வருடம் வந்துவிட்டோம். நாமும் இனிமேல் சீனியர்தான் என்று கெத்து காட்டலாம் என்று மகிழ்ச்சி தெரிந்தது வகுப்புப் பையன்களின் முகங்களில் எல்லாம். புதிய வகுப்பு ஆசிரியர், வகுப்புத் தலைவர் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்முறை வேறொரு மாணவனையேத் தேர்வு செய்வோம் என்று முடிவெடுத்தனர். அவர்கள் கூறிய காரணம், “பெண்களைத் தலைவியாகத் தேர்ந்தெடுத்தால் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்து கொண்டேயிருக்கின்றனர். நேரத்தில் அசைன்மென்ட், ப்ராஜெக்ட், லேப் வொர்க் முடிப்பது என்று காலந்தாமதிக்க பையன்களுக்கு வாய்ப்புத் தருவதில்லை! மாணவனாக  இருந்தால் நேர நீட்டிப்பு எல்லாம் கிடைக்கும் என்று சொன்னர். வேடிக்கையான காரணம் தான். இம்முறை

4 comments

  • எல்லாரும் எதோ எதோ சீர்வரிசை வாங்கிப்பாங்க. இது மாமனார் கிட்ட இருந்து பெண் பென்சில் தானே விட்ரலாம் :lol: நன்றி தோழி!
  • Fresher party yo :Q: Sathya Peru solliye escape aguranga....ivanga matter parents therinja tin than pole irukku :D interesting updates ma'am 👏👏👏👏👏👏 <br />Ella exams kkum free pen pencil venumakum :grin: nalla flow ma'am 👍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.