அவரின் உதவியுடன் இதனை ஒரு பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் போல் செய்ய வேண்டும் என்ற தகவலையும் கூற, அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
அதன்படி அனிதாவின் அம்மாவே மாப்பிள்ளை பார்த்தது போல் கதிரின் புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, அன்றே அனிதாவின் அப்பாவிடம் விஷயத்தை கூறினார். அவருக்கும் இது ஒரு நல்ல சம்பந்தமாகவே பட்டது. அனிதாவின் அப்பாவும் தலையை அசைக்கவே.....அடுத்த நாள் கார்த்திக் மற்றும் அசோக்கின் மூலம் கதிரின் அம்மாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு குடும்பத்தையும் இணைக்கும் பொருட்டு கார்த்திக்கும், அசோக்கும் அனிதாவின் அம்மா ஜானகியையும், கதிரின் அம்மா அபிராமியும் அலைபேசியில் சம்பந்தம் பேசி, இருவருக்குமே மனதில் திருப்தி ஏற்பட்டது.
அனிதாவின் அப்பாவிடமும் முடிவாக பேசியபின், அடுத்த மாதம் நேரில் வந்து பெண் பார்ப்பதாகவும், அதேபோல் தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள சென்னை வரும்படியும் அபிராமி கூறினாள். அதனை ஆமோதிக்கும் விதமாக அனிதாவின் பெற்றோர் இதற்கு ஒப்புக் கொண்டனர்.
அனிதாவின் அப்பா அனிதாவிடம் சம்மதம் கேட்கலாம் என்று கூற, அதற்கு அவளின் அம்மாவோ வேண்டாம் நாம் பார்த்து வைக்கும் திருமணம் மகள் மேல் நம்பிக்கை உள்ளது. நேரில் சென்று ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என்று கூறிவிட்டாள்.
இவர்களின் திட்டப்படியே அனைத்து காயும் நகர்ந்தது.அடுத்த வேலையாக கதிர் இடம் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்தனர்.
அதற்கும் கார்த்திக் ஒரு வழி சொன்னான். அவனின் அம்மா கூறினாள் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்லமாட்டான் என்று நம்பிக்கையாக கூற,
அதன்படி அபிராமியும் இரண்டு நாட்கள் கழித்து கதிரின் வீட்டிற்கு சென்றார். கதிர் எதிர்பாராத நேரத்தில் அவர் வந்ததால்,
என்னாச்சும்மா என்று பதட்டத்துடன் கேட்க......
ஒன்னும் இல்ல கதிர் உன்ன பாக்க தான் வந்தேன்.
அவரை சந்தேகப் பார்வை பார்த்து வரும்போது எப்பவுமே கால் பண்ணிட்டு தானம்மா வருவீங்க...
என்ன நான் போனுமா.... சரி போறேன்.
அம்மா என்று அவன் செல்லமாக கொஞ்ச.....
நான் கிளம்பிட்டேன்.