கண்களிரண்டும் சாஸரை போல் விரிந்தது.
அவன் அம்மாவை ஆச்சர்யமாக பார்க்க....
அவர் புருவத்தை உயர்த்தி எப்படி என்பது போல் காட்டினார்.
யு ஆர் மை பெஸ்ட் மாம். என்று அவரை கட்டிக்கொண்டு கத்தினான்.
டேய் போதும்டா....
அவனை விலக்கி நிறுத்தியவர். நீ உண்மையாகவே இந்த பொண்ண லவ் பண்றியா.
தெரியல மாம்...
என்ன...
அவன் பாவமாக முகத்தை வைத்து ஆமா மாம். இது லவ் ஆனே எனக்கு தெரியல. ஆனா அவ வேணும்னு தோணுது. இது எந்த மாதிரி உணர்வு மாம்.
அவனைப் பார்த்து வாஞ்சையாக சிரித்தவர். அவன் தலையை கோதியபடியே இன்னும் கொஞ்ச நாள்லயே உனக்கு இது என்ன மாதிரியான உணர்வுனு தெரிஞ்சிடும் கண்ணா. ஆனா அதுக்குள்ள உங்களுக்கு கல்யாணம் ஆகிடுமே என்று அவனைக் கேலி செய்தவர் மன நிறைவுடன் விடை பெற்றார்.
அந்த வாரம் தான் அனிதா வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்ட வாரம். அனிதாவின் நினைவில் கதிர் படாதபாடு பட்ட வாரம். அவளைக் காணாமல் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் விட்டு செல்லவும் முடியாமல் சற்று திணறித்தான் போனான். அவனால் அதை வெளியேவும் சொல்ல முடியவில்லை. கார்த்திக்கிடம் கூட சொல்லமுடியாமல் அவனது ஈகோ அவனை தடுத்தது.அதற்காக அப்பொழுதுதான் அவன் காதலை உணர்ந்தான் என்பதில்லை. அவன் காதலை உணர்ந்த தருணம் எவரும் செய்ய கூடாத செயலை அல்லவா அவன் செய்து விட்டான். காதலை உணர்ந்து ஒரு மணி நேரம் முடிவதற்குள்ளாகவே அவளை காயப்படுத்தி இதோ அட்மிட்-ம் செய்து விட்டான்.
ஆம், கதிரின் மாமா வீட்டில் தான் அவளது அந்தப் பார்வையில் தான் அவளுடைய அந்த பொறாமையில் தான் அவளுடைய அந்த கண்ணீரில் தான். அவனது காதலை உணர்ந்தான்.
காதலை உணர்ந்தும் அவளை காயப்படுத்தி இதோ அவன் உயிரற்ற ஜீவனாய் கிடக்கிறான்.
அதற்குள் டாக்டர் ஐசியூவில் இருந்து வெளியே வர, தேன்மொழிக்கு முன்பு கதிர் தான் போய் நின்றான்.
என்னாச்சு டாக்டர். அனிதா கண் முழிச்சிட்டாளா.....அவன் தவிப்புடன் கேட்க...
பீ கூல் கதிர். அவங்க இப்ப கண்ண முழிச்சா தான் எங்களால் எதையும் சொல்ல முடியும்.