மாம் ......
என்ன.....
இங்க வாங்க....என்று அழைத்தவன் அவர் மடியில் தலைவைத்து சிறுபிள்ளை போல் படுத்துக் கொண்டான்.
அவன் செயலை கண்டவள் புன்சிரிப்புடன் அவன் தலையை கோதி,
என்ன ஆச்சு என் செல்ல பையனுக்கு,
ஒன்னும் இல்ல மாம்.
அப்படியா....
அவன் தலையை வேகமாக ஆட்ட....
நம்பிட்டேன் நம்பிட்டேன்.
மாம்....
கண்ணா..... அம்மா உனக்கு நல்லது தான செய்வேன்.
நிச்சயமா மாம்.
அப்ப இவ்வளவு நாள் கேக்காத ஒன்ன அம்மா உன்கிட்ட கேட்க போறேன்.
எனக்கு தெரிஞ்சிடுச்சு.
இவ்ளோ நாள் உன்னோட நல்லதுக்காக.... மனநிலைக்காக இதைப்பத்தி நான் பேசாம விட்டுட்டேன். அம்மா சொன்னா கேட்பனு நம்பிக்கைல வந்திருக்கேன்.
மாம் நானே உங்ககிட்ட சொல்றேன்.
அந்த டைம்லாம் முடிஞ்சு போச்சு கண்ணா ....நான் உனக்கு பொண்ணு பாத்துட்டேன்.
வாட்..... என்று அவன் மனம் அதிர எழுந்து அமர்ந்தான்.
மாம் இது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பொண்ணு பாக்க கூட்டிட்டு போகனும்னு சொன்னா ஓகே. பொண்ணு பார்த்துட்டேன் சொன்னா.... என்ன அர்த்தம். நான் டிசைட் பண்ண வேணாமா???
இதுக்கு என்ன அர்த்தம்னா....... என் செல்ல பையன் நான் என்ன சொன்னாலும் ஒத்துக்குவானு அர்த்தம்.
அவன் முகம் தொங்கி விட்டது.
அவனைப் பார்த்து சிரித்தவர். இது தான்பொண்ணோட போட்டோ.
அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவன் முகத்தை திருப்பி அவன் இங்கே பாரு கண்ணா.....என்று போட்டோவை காட்ட...
கட்டாயத்தின் பேரில் திரும்பியவன். வேண்டாவெறுப்பாக போனை பார்த்தவனின்