எங்களால முடிஞ்ச எல்லா ஸ்டெப்யையும் எடுத்து பார்த்துட்டோம். இதுல குட் நியூஸ் என்னான்னா அவுங்களுக்கு எந்த ஒரு இடத்திலேயும் பலமான காயம் படல.... ஆனா அவுங்க கான்சியஸ் இல்லாம இருக்காங்க.
டாக்டர் நான் வேணும்னா உள்ள வரலாமா.
சற்று நேரம் அவனை உற்று பார்த்தவர். அவனின் தவிப்பு அவன் கண்களில் தெரிய சம்பந்தமாக தலையசைத்தார்.
இதனை தேன் மொழியால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
டாக்டர் சொன்ன அடுத்த நொடி ஐசியூவில் நுழைந்தவன். அனிதாவை அந்த நிலையில் கண்டவன் நிலைகுலைந்து தான் போனான். அதனோடு தன்னால்தான் அவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று குற்ற உணர்ச்சியும் அவனைக் கொல்லாமல் கொன்றது.
அவள் முகம் வீங்கி அவள் மூச்சுக்கு தவிக்க..... ஆங்காங்கு டியூப்கள் சொருகி இருந்தன. அவன் கண்களில் கரகரவென்று கண்ணீர் வழிய அதை புறங்கையால் துடைத்துவிட்டு அவள் அருகில் சென்றான். தன் நடுங்கும் கரங்களால் அவள் கரத்தினை பற்றியவன் தன் முகத்தில் வைத்து குலுங்கி குலுங்கி அழுதான்.
அதனைப் பார்த்த அங்கிருந்த செவிலியர். சார் இங்க அழுகலாம் கூடாது. நீங்க அழுதா அவுங்க இன்னும் வீக் ஆயிடுவாங்க.
தன்னை சரி செய்தவன். அவள் முகத்தையே உற்று நோக்கிய கொண்டிருந்தான். செவிலியர் அறையை விட்டு சென்றதும், மீண்டும் குலுங்கியன். அனிதா நீ எனக்கு வேணும் அனிதா. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டி. நான் உன்கிட்ட கடுமையா நடந்துகிட்டக்கு காரணமே எங்க உன்ன நான் லவ் பண்ணிடுவனோனு பயந்தேன். அதனாலதான் ஒவ்வொரு தடவையும் நீ நெருங்கி வரும்போது நான் விலகி போனேன். ஆனா எவ்வளவு விலகிப் போகியும் நீ என்ன தொறத்தி கிட்டே இருந்த....ஒரு கட்டத்துக்கு மேல....நீ என்கூட இப்படியே இருந்தர்னும் நெனச்சேன். அப்புறம் நீ வராத இந்த ஒரு வாரத்தில தாண்டி என் மனசுள நீ எந்த அளவுக்கு இடம்பிடிச்சு இருக்கன்னு தெரிஞ்சுகிட்டேன். உன்கிட்ட இன்னிக்கு காதல் சொல்லனும் தான்டி நினைச்சேன். ஆனால் இந்த பாழாப்போன என்னோட பழைய நினைப்பு என்னையும் வாழ விடாமல் உன்னையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கிருச்சு. அவள் கையை எடுத்து தன் கன்னத்தின் மீது வைத்தவன் நீ எனக்கு வேணும் அனி. நான் பேசுனது தப்புதான் பெரிய தப்பு. அதுக்கு நீ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் ஏத்துக்குறேன். ஆனா நீ என் பக்கத்துல வேணும்டி. நான் பேசின பேச்சுக்கு இவ்வளவு நேரம் நீ கண்முழிக்காம இருந்தே என்ன சாகடிச்சுட்ட அனி. இதுக்கு மேல என்னால முடியாதுடி. என்ன ஏமாத்திட்டாதடி. பிளீஸ் அனி.என்று அழுகை என்றால் என்ன விலை என்று கேட்கும் அந்த ஆறடி ஆடவனின்