காலேஜிலிருந்து லவ் பண்றானு உனக்கு தெரியுமா????
கதிர் அதிர்ச்சியாக அசோக்கை பார்க்க......
என்ன ஷாக்கா இருக்கா.......உனக்கு இன்னொரு ஷாக்கான நியூஸ் சொல்லவா......உன்ன ஃபர்ஸ்ட் லவ் பண்ணது அனிதா தான். அதுவுமில்லாமல் நீயும் விஷாலியும் லவ் பண்ணதும் அனிதாக்கு தெரியும். அந்த விஷயத்தைக் கேட்டு அவ எந்த அளவு நொறுங்கிப் போனானு உனக்கு தெரியுமா....... ஆனா அதுக்கப்புறம் அனிதா உன்னைப் பார்க்கிறதை தவிர்த்தா காலேஜ் மாத்தி போயிட்டா......அப்புறம் லாஸ்ட்டா ஃபேர்வல் அப்ப வந்தா. உன்னையும் பாத்தா...... உன்ன அந்த விஷாலி எந்த அளவு கேவலப்படுத்துனான்றதையும் பார்த்தா......அதைப் பார்த்து அவள் உன்னை விட அதிகமாக வேதனைப்பட்டா..... உன் கஷ்டத்த நீக்க.... உன்கூட இருக்க..... உன்னை நோக்கி ஓடி வந்தா...... ஆனா நான்தான் தடுத்துட்டேன். அப்படியே வந்திருந்தாலும் அவ காதலயே நீ சந்தேகப்படுற நிலைமைதான் வந்திருக்கும். ஏன்னா ஆல்ரெடி அடிபட்டு நீ இருக்கும் போது அவ போறது சரி இல்லைன்னு தோணுச்சு.
அதனால தான் அவளை தடுத்தேன்.அப்புறம் உன்ன 5 வருஷத்துக்கு முன்னாடி அந்த நைட் க்ளப் வாசல்ல தான் பார்த்தா...... தன்னோட காதலன் அந்த நிலைமையில் இருந்தத எந்த ஒரு பெண்ணாலும் பார்க்க முடியாது.
ட்ரக்ஸ்-க்கு அடிமையாகி ஏதோ ஒரு பொண்ணு கூட இருந்த...... அவளை நீ எத்தன வாட்டி சாவடிச்சிருக்க தெரியுமா..... அப்பயும் அந்த லூசு என்ன தான் திட்டுச்சு. என்னை ஏன் தடுத்த நான் அப்பவே கதிர் கூட இருந்திருந்தனா கதிர் இப்படி ஆக விட்டிருக்க மாட்டேனே...... அப்படின்னு ஒரே கதறல் தான்.
அப்புறம் உன்ன பத்தி நான் விசாரிச்சேன். நீ அந்த துரோகியோட துரோகத்தை மனசுல வெச்சு இப்படி சீரழிஞ்சுட்டு இருக்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். எனக்கு அனிதா முக்கியம். உன்ன நினைச்சு நினைச்சு அவ தினம் தினம் நரக வேதனை அனுபவிச்சிட்டு இருந்தா..... அதுக்காக நான் தான் உன்னோட ஸ்கூல் பிரெண்ட் கார்த்திக் - அ இங்க வர வச்சேன். உன்ன பாக்க வச்சேன். நான் நினைச்ச மாதிரி கார்த்திக் உன்ன மாத்துனா.... நீயும் மாறின....உன்ன தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷப்பட்டா.....ஆனா நாங்க இவ்வளவு பண்ணது கார்த்திக் கூட தெரியாது. எல்லாமே ஃபிரண்ட் மூலமாதான் மூவ் பண்ணோம்.....எல்லாமே நல்லதா தான் போச்சு. இந்த அனிதா திரும்ப உங்ககிட்ட வராத வரைக்கும்.
கதிர் கண்களில் கண்ணீர் வழிய இதயத்தில் ரத்தம் வழிந்தது. தன்னவள் தனக்காக எத்தனை காரியங்களை செய்திருக்கிறாள் என்று நெஞ்சம் விம்மியது. இப்படிப்பட்டவளை சந்தேகப்பட்டு என்னென்ன வார்த்தையெல்லாம் கூறி விட்டேன் என்று அவன் மனது குற்ற உணர்வில் குறுகுறுத்தது. என்னவளின் பிஞ்சு மனதை நானே கொன்று விட்டேனே....என்று