உள்ளே செல்ல அங்கு அனிதா வாடிய கொடியாக படுத்திருந்தாள். அதனை கண்டவனின் கண்கள் எவ்வளவு தடுத்தும் நிற்காமல் கலங்கியது. அவளும் அவனை தான் முதலில் பார்த்தாள். பின்பு கண் கலங்கியபடி தன் அருகில் வந்த அன்னையை கண்டவள்.
கஷ்டப்பட்டு சிரிக்க முயற்சி செய்தாள். அவள் தலையை தடவியவர். கண்களை துடைத்துக் கொண்டார்.
ஏம்மா அழற அதான் எனக்கும் எதுவும் ஆகலைல......
வாய மூடுடி...... இப்படி வந்து படுத்துட்டு ஒன்னும் ஆகலனு சொல்ற.....
அப்பா பாருங்கப்பா இப்பவும் அம்மா என்ன திட்டுறாங்க.....
அவள் அருகில் வந்தவர். கண்ணை துடைத்துக் கொண்டு, கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கலாம்லமா......
இப்பொழுது அனிதாக்கும் கண்கள் கலங்கியது. அதனை துடைத்தவர் நெற்றியில் முத்தமிட்டு அழக்கூடாது மா போறாத காலம் இப்புடி ஆகி போச்சு. இனிமே என் பொண்னுக்கு நல்லது தான் நடக்கும் என்று அவள் அப்பா கூறினார்.
அடுத்ததாக தேன்மொழியை கண்டவள் சாரிடி உன்கிட்ட சொல்லாம போனதுக்கு.
தேன்மொழி அவசரமாக அவள் வாயை மூடினாள். லூசாடி இப்புடிதா பேசுவாங்களா..... பாருங்கண்ணா இவள.....
அசோக் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை அருகே வரும்படி அழைக்க...... .
அருகே வந்து அவள் கையை பிடித்துக் கொண்டான்.
ரொம்ப பயந்துட்டியாடா.....
அவன் தலையை மட்டும் ஆட்ட.....
எப்படி டா அப்புடி நினைச்ச உன் கூட இருந்து உன்ன இம்ச பண்ண வேண்டியது நிறையா இருக்கு மச்சி.....
அவளை செல்லமாக முறைத்தவன். போடி என்று கூறினான்.
அனிதா பெயின் ஏதாவது இருக்கா..... இப்ப ஒகே தானா....
பெயின் எதுவும் இல்ல கார்த்திக் சார். ஐ அம் ஆல்ரைட்.
குட் .....
ஆமா எங்க ஏன் ஸ்வேது குட்டி மொழி.......
ம்ம் ..... அவளே இப்பதான் அழுது அழுது எங்க வீட்ல செட் ஆயிருடுக்கா... தேன்மொழியே நேத்துல இருந்து ஸ்வேதாவ பார்க்கல அனி.