பழகிருச்சா அதான் அப்புடி கூப்பிட்டேன்.
பரவால்ல அபிராமி மா. நீங்க அப்படியே கூப்பிடுங்க.
அபிராமி யோசனையுடன் அவரை ஏறிட,
அட ஆமா சம்பந்தி நீங்க எனக்கு எப்பவுமே சம்பந்தி தான். ஏன்னா நானும் சிவகாமியும் சேர்ந்து நேத்து நைட் ஒரு முடிவு எடுத்தோம். வீட்டுக்கு போயி ஆறாம்சா உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க இப்பவே சொல்ல வேண்டிய சூழ்நிலை அமைஞ்சிருச்சி.
என்ன விஷயம் சம்பந்தி.
மாப்பிள்ளை தம்பியும் இங்க தான் இருக்காரு. அதனால நான் இப்பவே விஷயத்தை சொல்லிடுறேன். என் தம்பி பொண்ணு காவ்யாக்கு கதிரை கேக்கலாம்னு ஒரு எண்ணம். நீங்க ஓகே சொன்னீங்கன்னா தம்பி கிட்ட பேசிடுவேன். ஏன்னா கதிர் தம்பிய விடுறதுக்கு எனக்கு மனசே இல்ல. ரொம்ப நல்ல புள்ளையா இருக்குதே. இந்த மாதிரி சம்பந்தம் லேசுல அமையாது. அதுக்குதான் கேட்கிறேன். உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க சம்பந்தி.
இது அனிதாவிற்கு மிகப் பெரும் அதிர்ச்சி அந்த முட்டை கண்ணு ரெண்டும் பிதுங்கி வெளியே வந்து விடும் அளவிற்கு ஷாக்காமா.....
கதிர் மாப்பிள நீங்க என்ன சொல்றீங்க.
ஐயோ அங்கிள் இதெல்லாம் நீங்க என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க. பெரியவுங்களா பார்த்து எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான் என்று கதிர் கூற,
அனிதா பார்வையாலே கதிரை பொசுக்கி கொண்டிருந்தாள்.
கதிர் அதனை கண்டும் காணாமல், சரி அங்கிள் எல்லா விஷயத்தையும் ஏன் இங்கயே நின்னு பேசணும். வாங்க வீட்டுக்கு போவோம் என்று அவனே எல்லாரையும் கிளப்பி தேன்மொழி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
அங்கு தேன்மொழியிடம் இன்றே பேசிவிட வேண்டும் என்று கார்த்திக் எட்டு மணிக்கே கிளம்பி வந்துவிட்டான். ஆனால் அவன் நேரம் தேன்மொழி ஸ்வேதாவை ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக்கு வர அவனை வரவேற்றவள். அமர வைத்துவிட்டு அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள்.
என்ன விஷயம் சார். இவ்ளோ இயர்லி-யா வந்து இருக்கீங்க அது தான் கேட்டேன்.
கொஞ்சம் முக்கியமான விஷயம் தேன்மொழி பேசலாமா என்று கேட்க,
ஸ்வேதாவை பார்த்து கடிகாரத்தை பார்த்தவள்.
சார் நீங்க தப்பா நினைக்கலனா..... ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்றிங்களா சார். ஸ்வேதாவ ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டுறேன். அப்புறம் நிதானமா பேசலாம் என்று சொல்ல,