(Reading time: 5 - 10 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

பகுதியில் போர்வை இழுக்கப்பட்டு தூரத்தில் எறியப்பட்டது.

       “விருட்”டென்று எழுந்து பாயில் அமர்ந்தபடியே “டேய்...யார்ரா அவன்...விளையாடறது?...எங்கடா ஒளிஞ்சிட்டு இருக்க...வெளிய வாடா?” என்று கத்தினான்.

       எந்தவித பதிலும் இல்லாததால் பாயிலிருந்து எழுந்து மொட்டை மாடிக் கைப்பிடிச்சுவர் அருகே சென்று குனிந்து கீழே பார்த்தான்.  அங்கிருந்த மறைவிடங்கள் ஒன்றைக் கூட விடாமல் எல்லா இடத்திலும் சென்று பார்த்தான்.  எங்கும்...யாரும்...இல்லை.

       “என்னது...யாரையுமே காணோமே?...ஒருவேளை எவனாவது திருடனாயிருப்பானோ?”  லேசாய் பயம் தோன்ற யோசித்தான்.

       “அடுத்து என்ன பண்ணலாம்?...கரெக்ட்...மறுபடியும் போர்வையால் முக்காடு போட்டுக்கிட்டு தூங்காம  முழிச்சுக்கிட்டே பார்த்திட்டு இருப்போம்!...கால் பக்கம் அவன் போர்வையைத் தொட்டதும் “டக்”குன்னு எந்திரிச்சு அவன் ஓட முடியாதபடிக்கு அவன் காலை இறுகப் பிடிச்சுக்கிட்டு “திருடன்...திருடன்”ன்னு கத்தி ஊரையே எழுப்பிடுவோம்!”

       தூரக் கிடந்த போர்வையை எடுத்துக் கொண்டு மறுபடியும் பாயில் வந்து போர்வையால் முக்காடிட்டுக் கொண்டான். அதைப் பற்றி இழுக்கும் திருடன் எளிதாய் இழுத்து விட முடியாதவாறு எல்லாப் பக்கமும் டைட்டாக இறுக்கி வைத்துக் கொண்டு உள்ளே கொட்டக் கொட்ட விழித்தபடி காத்திருந்தான்.

தொடரும்...

Next episode will be published on 23rd Mar. This series is updated weekly on Tuesdays.

Go to Neeyaga naan naanaga nee story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.