கொண்டான்.
அந்த பிடியில் இருந்த உறுதி அவளை அசைக்க அவளது விறைத்த விரல்கள் தளர்ந்து அவன் கையைப் பற்றி கொண்டது.
அனைவரும் விழா மேடையை கவனிப்பதை உணர்ந்த இருவர் விழிகளும் மேடையைப் பார்த்தாலும் இருவர் மனதும் மற்றவர் மனதோடு கலந்து கொண்டு இருந்தது.
அவளது விரல்களை மெதுவாக அழுத்தி கொடுத்தவன் தன் விரல்களோடு அவள் விரலை சேர்த்து கோர்த்துக் கொண்டான்.
வார்த்தைகள் எதுவும் அங்கே உரையாடவில்லை... விழிகள் இரண்டும் சந்தித்து கொள்ளவில்லை... ஆனால் கோர்த்துக் இருக்கும் விரல்கள் மௌனமாக தங்கள் சோக கீதங்களை மெல்லிசையாக மாற்றிக் கொண்டு இருந்தது.
விழா மேடையில் குயிலியின் தாய் தந்தையரின் கண்டு பிடிப்பு விவசாய உலகில் பெரும் முன்னேற்றங்களை கொண்டு வந்து விட்டது என்று சொல்லி அவர்களுக்கு விருது அளித்து கௌரவித்தது. அதோடு சாதனை இளைஞன் என்று சொல்லி கார்த்திக்கும் விருது வழங்கப்பட்டது. அதோடு துணையாக இருந்த அவனது நண்பர்களை பாராட்டி பரிசு தொகைகள் வழங்கப்பட்டது.
குயிலியின் மலைக்கோயில் வீரத்தை திரையிட்டு காட்டி அவளுக்கு விருது வழங்க அழைத்தார்கள். மேடை ஏறிய குயிலி சிறிது பேச அனுமதி வாங்கி கொண்டு என்னோட இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ஆசிர்வாதம் அவர்கள் என்று கூறியவள் தாத்தாவின் உதவியை சுருக்கமாக கூறி விட்டு ஆசிர்வாதம் தாத்தா கைகளால் இந்த விருதை வாங்க விரும்புகிறேன் என்று சொல்லி கார்த்திக்கை பார்த்தாள். அந்த பார்வை கார்த்திக் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது. அதோடு அவள் மனதில் இருக்கும் வலியையும் உணர்த்தியது.
அவளுக்கு தன்னை புரிய வைக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் விழியைத் தாழ்த்திக் கொண்டான்.
ஏனோ அவன் விழித் தாழ்த்தி இருப்பது பெண்களுக்கு பிடிக்கவில்லை.. மேடையில் இருந்து கீழே இறங்கும் போது தடுமாறுவது போல அவன் கையைப் பற்றி கொண்டாள்.
அவள் கைப்பிடிகள் உணர்த்திய வார்த்தைகள் அவனுக்குள் புன்னகையாக வெளிவந்தது. அதோடு பெணண்ணவளின் கையைப் பற்றி கொண்டு ஒரு கையால் தன் கேசத்தை கோதிக் கொண்டு ஸ்டைலாக கீழே இறங்கினான்.
அதன் பிறகு சில மணிநேரங்கள் அங்கிருந்து மீதி வேலைகளை முடித்து விட்டு அனைவரும் ஒன்றாக அங்கிருந்து ஹோட்டல் சென்றனர்.
இரவு முழுவதும் குயிலி தாய் தந்தையுடன் பேசி முடித்து உறங்க செல்லும் பொழுது நேரம்