அப்படியே மூடிக் கொண்டாள்.
அவளின் அமைதியைக் கண்டதும் சேரின் மீது இருந்த அவளது கையின் மீது அவன் கையை வைத்து அழுத்தினான்.
அந்த அழுத்தம் அவளது மனதிற்குள் அழுத்திக் கொண்டு இருந்த அழுத்தத்தை குறைத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் யார் சார் நீங்க.. முதல்ல கையை எடுங்கள்.. இல்லை என்றால் என்ன செய்வேனு எனக்கே தெரியாது என்று அடிக்குரலில் சீற அவனோ அவள் கையைப் பிடித்து தன் நெஞ்சோடு வைக்க கார்த்திக் கையை விடு... யாராவது பார்க்க போறாங்க என்று சுற்றி பார்த்து கொண்டே கையை இழுத்தாள்...
யாரும் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்று சொல்லி கொண்டே அவள் உள்ளங்கையில் அழுத்தமாக தன் முத்தத்தை பதிக்க பெண்ணுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு பரவ தன் கையை இழுத்துக் கொண்டு தன் மறுகையோடு சேர்த்து கோர்த்துக் கொண்டாள்.
கார்த்திக் ஒரு சிரிப்புடன் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான். எல்லோரும் மேடையைப்பார்த்துக் கொண்டு இருக்க கார்த்திக் விழிகளோ தன்னவளை அள்ளி பருகிக் கொண்டு இருந்தது.
அருகில் இருந்த சங்கர் அவனைத் தட்டி மச்சான்... கழுத்து சுளுக்கிக்க போகுதுடா... முன்னால் பாரு என்று சொல்ல அவனை முறைத்து விட்டு ஓரவிழியால் தன்னவளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.
அவன் பார்வை பெண்ணவளுக்குள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்த நெளிந்து கொண்டே அமர்ந்து இருந்தாள். மறந்தும் கார்த்திக் பக்கம் திரும்பவில்லை.
ஆனால் அவனோ அவளை தவிர பார்க்க எதுவுமேயில்லை என்பது போல பார்த்து கொண்டே இருக்க திரும்பி பார்த்து முறைத்தவள் நேராக பாரு என்று சொல்ல அவனோ அவளை திரும்பி பார்த்து அமர்ந்து கொண்டு நேராக தான் பார்க்கிறேன் என்றாள்.
அவளைப் பார்த்து அமர்வதற்காக ஒருகாலை சீட்டில் மடித்து வைத்து கொண்டதால் மறுகால் குயிலியின் கால் அருகே இருந்தது.
ஒரு நிமிடம் அதை கவனித்த குயிலியின் முகத்தில் புன்னகை தோன்ற... அதைப் பார்த்த கார்த்திக் சற்று குழம்ப அதற்குள் தன் ஹை ஹீல்ஸ் செருப்பால் அவன் காலை அழுத்தினாள்.
அவள் முகத்தில் தோன்றிய புன்னகையை வைத்தே அவள் எண்ணத்தை உணர்ந்தவன் லீவில் இருந்து காலை வேகமாக வெளியே எடுத்து இருந்தான். அவளோ அதை கவனிக்காமல் மேடையை பார்த்து கொண்டே அழுத்தியவள் அவனிடம் இருந்து வலிக்கான ரியாக்ஷன் இல்லாமல் குறும்பு சிரிப்பு தோன்றியதை கண்டு கீழே பார்த்தவள் கோபத்துடன் அவன் கையை நறுக்கென்று கிள்ள அவனோ அதைப் பொருட்படுத்தாமல் அவள் கையை பிடித்து