கார்த்திகை பார்த்ததும் அமைதியாக நின்றாள்.
அவர்கள் பேசுவது தெளிவாக குயிலி காதில் விழ தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திரும்பவும் "கார்த்திக்... உனக்கு உண்மை தெரிந்ததும் குயிலியிடம் சொல்லி இருக்கலாமே... அவள் மனதில் இருக்கும் அந்த கோபம் உன்னிடம் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவளோடு சேர்த்து உன்னையும் காயப்படுத்தி கொண்டு இருக்கிறதே" என்று குயிலியின் மனதில் இருக்கும் கேள்வியை அவளது அன்னை கேட்டே விட்டார்கள்.
தான் எதையும் வெளிப்படையாக கூறாமல் இருந்தும் தன் மனதில் இருப்பதை உணர்ந்து கொண்ட தாயின் பாசம் அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு கார்த்திக் பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த இடத்திலே நின்று கொண்டாள்.
கார்த்திக் பேச தொடங்கினான்.
அத்தை... நான் நியூயார்க்கில் படித்து கொண்டு இருக்கும் போது கூட படித்த ஒரு மாணவன் திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட அவனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு ஒரு மருத்துவரை பார்த்தேன்.
அவர் என்னை பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் என் கையில் ஒரு துண்டு பேப்பரை வைத்து விட்டு போனார்.
நான் குழப்பத்துடன் பேப்பரை பிரித்து பார்த்தேன். அதில் நீ உன்னை பற்றி தெரிந்து கொள்ள அழை என்று சொல்லி மொபைல் நம்பர் இடம் பெற்றிருந்தது.
உடனே அவருக்கு அழைத்தேன். தனியாக அவரை சந்திக்க அழைத்தார். அவரது மருத்துவமனைக்கு சென்ற போது பிரதாபன் போட்டோவை காட்டி இவர் தானே உன் அப்பா என்று கேட்டார். நான் ஆமா என்று தலையசைக்க என்னை உள்ளே அழைத்து சென்று கணினியில் ஒரு வீடியோவை காட்டினார் என்று சொல்லும் போதே அவன் குரல் தழுதழுத்தது.
ஒரு வாறாக தன்னை சரி செய்து கொண்டு மீண்டும் பேசினான் கார்த்திக்..
என்னுடைய மூளையில் பதிவு செய்து இருக்கும் ரகசியங்களை எடுத்து தர சொல்லி பிரதாபன் பேசியதும் அதற்கு டாக்டர் அது காலம் செல்லச் செல்ல நினைவு வரும்... இப்போது எடுத்தால் சிறுவன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொல்லியும் கேட்காமல் அந்த சோதனைக்கு அழைத்து செல்வதைப் பார்த்ததும் எனக்கு பயங்கர திகைப்பாக இருந்தது. அதோடு பழைய நினைவுகளை மூளையில் இருந்து எடுத்து வைத்து விட்டு பிரதாபனிடம் எடுக்க முடியவில்லை... இருபது வயதுக்கு மேலானால் தான் எடுக்க முடியும் என்று பொய் சொல்லி அனுப்பியதையும் காட்டினார்.
அதோடு கூடிய சீக்கிரம் உன்னை அழைத்து கொண்டு என்னை பார்க்க வருவார். அப்போது