விடிந்து இருந்தது.
அதன் பிறகு மும்பையில் இருந்த அவர்களது சொந்த வீட்டிற்கு சென்றனர். ஏற்கனவே கார்த்திக் நண்பர்கள் அந்த வீட்டை பழுது பார்த்து சரி செய்து இருந்தனர்.
பல கஷ்டங்களை அனுபவித்து மீண்டு வந்து இருப்பதால் பால் காய்ச்சுவதற்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
மிக எளிமையாக பால் காய்ச்சி விட்டு மற்ற வேலைகளை தொடங்கினர்.
மறு நாள் விடிந்தது...
எல்லா செய்திதாள்களிலும் விருது விழா புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அதிலும் ஒரு செய்திதாளில் குயிலியின் கையைப் பிடித்து கொண்டு ஸ்டைலாக கேசத்தை கோதிக் கொண்டு இறங்கும் கார்த்திக் பார்வை குயிலி மீது பதிந்து இருக்க அவளோ தலைகுனிந்து சிரித்துக் கொண்டு இருப்பது போல புகைப்படம் வெளியாகி இருந்தது.
அந்த புகைப்படத்தின் கீழே "இல்லறத்தில் இணைய காத்திருக்கும் இளம் சாதனை வீரர்கள் இதோ...." என்ற வார்த்தையும் இடம் பெற்றிருந்தது.
ஏனோ அந்த பத்திரிகையாளர் மீது கோபம் வந்தாலும் குயிலி வெட்கப்படுவது போலும் தான் ரசித்து சிரிப்பது போலும் ரசனையோடு புகைப்படம் எடுத்திருந்த அவர் மீது ஆத்திரம் ஏற்படாமல் போனது...
அதன் பிறகு வந்த நாட்கள் வேகமாக கடந்தது. இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் பார்த்து கொள்வது அரிதாக தான் இருந்தது.
விவசாயிகளிடம் இருந்து பொருட்களை தாங்களே கொள்முதல் செய்து விற்று விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கொள்முதல் நிலையங்கள் ரைஸ் மில்கள் தொடங்க என்று பயங்கர பிஸியாக இருந்தான்.
இத்தனை வருட பிரிவுகளை ஈடுகட்டும் வகையில் எப்போதும் தாயோடு இணைந்து இருந்தாலும் மனம் கார்த்திக்கை தேடியது.
அவன் மீது அதிக கோபம் இருந்ததோடு அவனுக்கு மட்டுமே விடை தெரிந்த சில வினாக்களும் மனதில் அரித்து கொண்டு இருக்க அதோடு மனம் அவன் அருகாமையையும் அவன் காதலையும் தேட தவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனிடம் பேச கூட நேரம் இல்லாமல் போக சில நேரம் பார்வை பரிமாற்றங்களுடன் கடந்தது நாட்கள்.
மதிய வேளை அசதியாக இருக்க சற்று ஓய்வு எடுத்தவள் தாயை தேடினாள். எங்கும் இல்லாமல் போக தேடி கொண்டே வீட்டின் பின்புறம் வந்தவள் படிக்கட்டில் அமர்ந்து இருந்த தாயைப் பார்த்ததும் அம்மா என்று அழைக்க வாயெடுத்தவள் மடியில் படுத்து இருந்த