தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்
இருட்டோடு இருட்டாய் அவர்களைத் தன் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்த ரவீந்தர், நிதானமாய்க் கேட்டான். “சொல்லுங்க உங்க கதையை”
“சார்....என் பேர் ராஜேஸ்!...நான் இதே ஊர்...இதே உப்பாயம்மன் தான் எனக்கு குல தெய்வம்!....இவ பேரு ரம்யா...இவ மடத்துக்குளம்...நாங்க ரெண்டு பேரும் ஒரே பஸ்ல காலேஜ் போயிட்டிருந்தோம்...அப்ப பழக்கமாகி...கடைசில...அது காதல்ல முடிஞ்சிடுச்சு!”
“அப்ப ரெண்டு பேருமே படிச்சவங்க...ஹூம்...படிச்சிருந்தும் இப்படியொரு முடிவை எடுத்திருக்கீங்களே?”தலையிலடித்துக் கொண்டு சொன்னான் ரவீந்தர்.
“சார்...காலேஜ்ல படிச்சிட்டு இருந்த காலம் வரையில் எங்க காதலுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருந்திச்சு...அப்புறம் படிப்பை முடிச்ச பிறகு நாங்க ரெண்டு பேரும் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போயிடுச்சு!...இருந்தும் நான் விடாமல் அப்பப்ப மட்த்துக்குளம் போய் இவளை சந்திச்சிடுவேன்” ராஜேஸ் சொல்ல,
“அவங்க வீட்டுக்கே நேரா போய்ப் பார்த்திடுவீங்க?” ரவீந்தர் கேட்டான்.
“அய்யய்யோ...அவ்வளவுதான் என்னை அங்கேயே கொன்னு பொதைச்சிடுவாங்க!...அதனால...ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு இவளை வரச் சொல்லிப் பேசிட்டு வருவேன்!...அப்படிப் பேசிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தர் பார்த்திட்டுப் போய் இவங்க வீட்டுல தகவல் குடுத்திட்டார்...என்னைத் தேடி அவங்க வ்ர்றதுக்கு முன்னாடி நான் கிளம்பிட்டதால் தப்பிச்சேன்!...இல்லேன்னா....?”
“இல்லேன்னா?...என்ன தலையையா எடுத்திருவாங்க?” ரவீந்தர் சாதாரணமாய்ச் சொல்ல,
“ஆமாம் சார்..தலையை எடுத்திடுவாங்க!” என்றாள் அந்த ரம்யா.
அரண்டு போனான் ரவீந்தர். “என்னம்மா...இப்படி சாதாரணமாச் சொல்றே?”
“சார்...எங்க ஆளுங்களுக்கு சாதி வெறி ஜாஸ்தி!...எனக்குத் தெரிஞ்சு எங்க சொந்தக்காரப் பொண்ணு ரெண்டு பேரை அவங்க குடும்பத்து ஆட்களே விஷம் வெச்சுக் கொன்னிருக்காங்க!” அந்தப் பெண் பீதியைக் கிளப்பினாள்.
“ஏன்?...எதுக்கு?”
“வேற சாதிப் பையனைக் காதலிச்சு.. “அவனைத்தான் கட்டிக்குவேன்!”ன்னு முரண்டு பிடிச்சதுக்கு!”
“ஓ...” மேவாயைத் தேய்த்தான் ரவீந்தர்.
“என் விஷயம் வெளிய வந்ததும் எனக்கு உடனே உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்தாங்க!...நான் அந்த மாப்பிள்ளையைக் “கட்டிக்க மாட்டேன்!”னு மறுத்தா கண்டிப்பா எனக்கும் விஷம்தான்!...என்ன செய்யறது?ன்னு தெரியாம போன்ல இவர் கிட்டே