(Reading time: 13 - 25 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

விசாரிக்க ஆரம்பித்தார்.

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

அப்பாவிடம் போய் அவர் தெரிந்து கொண்டதைச் சொல்ல, அப்பாவும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்களில் சில சமயம் சந்தேகம் இருந்ததாக சொல்ல, இருவரும் உடனே சித்தப்பா வண்டியில் கிளம்பிச் சென்று, பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் விசாரித்து ஒரே எண்ணில் இருந்து பல அழைப்புகள் அவர்கள் வீட்டுத் தொலைபேசிக்கு வந்ததையும், அழைக்கப் பட்டதையும் அறிந்து கொள்கின்றனர். ரம்யா தனியே அவளாக  தினேஷின் வீட்டுக்குச் சென்றது வரை அவர்களுக்குத் தெரிய வந்தது. அதே நேரத்தில், வீட்டில் அம்மாவோ, ரம்யா வீடு வந்து சேர்வதற்குள், அவள் அறையை சுத்தம் செய்துவிட வேண்டும், சமீப காலமாக யாரையும் உள்ளேயே விடுவதில்லை நான் பார்த்துக்கிறேன் என்று தடுத்து விடுகிறாள் என்று சொல்லிக்கொண்டே அவளின் அறைக்குள் பார்க்கையில் அவள் அறையை மிகவும்  சுத்தமாகவே வைத்திருந்தாள். கல்லூரிப் பையைத் துவைக்க வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில், ரம்யாவின் கல்லூரிப்பையைத் திறந்து பார்த்த அம்மா, கையினால் வரையப்பட்ட ஒரு கிரீட்டிங் கார்டை எடுக்கிறார் . அதில் இரண்டு தவளைகள் வரையப்பட்டு ராஜா ராணி கிரீடம் வைத்து, டி, ஆர் என் இனிஷியல் எழுதப்பட்டு இருந்தது. “You may be someone in this world, but for me, you are my world!” “இந்த உலகத்துக்கு நீ யாராகவோ இருக்கலாம், ஆனால்   எனக்கோ என் உலகமே நீதான்!” என்னும் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. யார் இப்படி எழுதி இவளிடம் கொடுத்திருப்பா என்று யோசித்தவர், அவளிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோம் என்றெண்ணி அதை எடுத்த இடத்தில் வைத்தார்.. வீட்டில் தான் வசமாகச் சிக்கப்போவது தெரியாமல் சந்தோஷமாக நுழைந்த ரம்யா, திரைப்படப்பாடலை உற்சாகமாக முணுமுணுத்தாள். “என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி”. அம்மாவின் காதில் அந்த வரிகள் கேட்கவும், நல்லபடியாக இருந்த என் மகள் மாறித் தான் போய்விட்டாள், கண்முன்னே எத்தனை நாடகம், பேசியதெல்லாம் பொய்யும் புரட்டும், அம்மாவிற்குக் கோபமாக இருந்தது. எப்போதும் நிதானம் இழக்காமல் அவளிடம் எந்த விஷயமாக இருந்தாலும் பக்குவமாகப் பேசுவோம் என்று அப்பா சொன்ன ஒரு காரணத்துக்காக அமைதியாக இருந்தார்.

இரவு அப்பாவும் சித்தப்பாவும் ஒன்றாக வந்தனர். ரம்யாவுக்கு இந்நேரம் சித்தப்பா என்ன விஷயமாக வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஏதேனும் குடும்ப விஷயம் பெரியவர்கள் பேசக் கூடியிருப்பார்கள் என அவளாக நினைத்துக் கொண்டு தன் அறைக்குள் செல்ல எத்தனித்தாள். ரம்யா இங்கே வா! உன்கிட்ட தான் பேசணும் என்று அம்மா கூப்பிடவும் கொஞ்சம் பயம் பற்றிக்கொண்டது. அவளின் கையில் அந்த கிரீட்டிங் கார்டை நீட்டி, “என்ன இது?” என்று சொல்லவும், “ப்ரெண்ட் மா!” என்றாள் ப்ரெண்டா ஹார்ட் லாம் போட்டு கிரீட்டிங் தராங்க? என்று அம்மா கேட்க, அவளிடம் பதிலில்லை. அவர்கள் அனைவரின்  கேள்விகளின்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

4 comments

  • :thnkx: தோழி! அதன் போக்கில் போக விட்டு பிடிப்பது என பெற்றோர், பிள்ளைகள் என்று இரு பக்கமும் இருக்கிறார்கள். காதல் வெல்லும்
  • Good decision!! Veetula irukuravangalukku therinjadhum nalladhu :yes: padichi oru nalla nilaikku vandhalum ivanga parents accept panuvangala doubt than but appo ena agumnu wait pani parkalam :yes: hope we can expect some smart move from both of them... interesting update ma'am 👏👏👏👏👏👏<br />Thank you.
  • facepalm :sad: epi. :Q: enna panna porangalo theriyavillai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.