(Reading time: 13 - 25 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

விசாரணைக்குப் பிறகு, எல்லா விஷயங்களும் தெரிந்துவிட்டதென்று ரம்யாவுக்குப் புரிந்தது.  எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றாவறே கையை ஓங்கிய அம்மாவைத் தடுத்தார் அப்பா. எவ்வளவு தடவை இவளுக்குப் படிச்சி படிச்சி சொல்லியிருப்பேங்க. உன்னை நம்பி காலேஜ் அனுப்புறோம். கஷ்டப்பட்டு பீஸ் கட்றோம். படிப்பதைத் தவிர எதுவும் உன் மனசில் இருக்கக்கூடாதுன்னு. ஒழுக்கமா ஒத்தப் பொம்பளைப் புள்ளைய வளர்க்கத் தெரியலன்னு என்னைதானேங்க எல்லாரும் கேவலமா நினைப்பாங்க. என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கன்னு! அம்மாவின் குரலில் ஆதங்கமும் அழுகையும் முட்ட, ரம்யாவும் கலங்கித்தான் போனாள். “எங்களுக்கு எல்லாம் தெரியும்!” என்று அப்பா அவர்கள் காதலைப் பற்றி அறிந்துகொண்டதை சொன்னார். தினேஷின் தொலைபேசி அழைப்புகள், அவன் தாயின் இறப்பிற்கு அவனது வீட்டிற்குச் சென்றது, அன்றைய காலையில் தான் தினேஷின் அண்ணன் திருமணத்திற்குச் சென்று வந்தது என ஒரு விஷயம் விடாமல், அனைத்தையும் சித்தப்பாவின் மூலம் அவளின் பெற்றோர்கள் தெரிந்து கொண்டார்கள் என்பது ரம்யாவுக்குப் கலக்கமாக இருந்தாலும், இனி தான் மறைக்க ஒன்றுமில்லை என்ற தைரியமும் வந்தது. அவன் என்ன ஜாதி நாம என்ன ஜாதி தெரியுமா. அவனைப் போய் விரும்புறேன்னு சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று சித்தப்பா சொல்ல, அப்பா இறுக்கமாக அமர்ந்திருந்தார். அம்மா அருகில் நின்றார்கள். இருவரின் அருகே சென்று மண்டியிட்டாள், அப்பா அவளிடம் ஒரு கடிதத்தைத் நீட்டினார். அவளின் அந்த மாத மதிப்பெண் பட்டியல். பார்த்தியா இன்னிக்குத் தான் தபாலில் வந்தது, எல்லாப் பாடத்திலயும் தொண்ணூறு  சதவீதத்துக்கு மேல மார்க் வாங்கிருக்க. உன்னோட லட்சியம் படிச்சு நல்ல வேலைக்குப் போறது. அதுக்கு முன்னாடி இதெல்லாம் வெறும் தூசிடா. உதறித் தள்ளிட்டு இன்னும் உன் திறமையைப் படிப்பில பயன்படுத்தி அதுல ஷைன் பண்ணு. இதெல்லாம் உனக்குத் தேவையே இல்ல. அப்பா உறுதியான குரலில் சொல்லவும், ரம்யாவுக்கு அழுகை வந்தது, அப்பா ப்ளீஸ்ப்பா, தினேஷும் ரொம்ப நல்லவன்ப்பா என்றவளிடம், அவன் நல்லவனாவே இருக்கட்டும், ஆனால் நம்ம குடும்பத்துக்கு ஏற்றவன் இல்ல, அப்பா ப்ளீஸ்ப்பா என்று அவரின் காலைப் பற்றினாள். அம்மா நீங்களாச்சும் சொல்லுங்கம்மா என்றவளிடம், அப்பாவின் முடிவு என்னவோ அதுதான் என் முடியும் என்றார் அம்மா. சித்தப்பா அவளிடம் முன்வந்து, அவளின் இரு கரங்களையும் குவித்தவாறு பிடித்துக் கொண்டார், “நீ யார் தெரியுமாடா, இந்த குடும்பத்தோட விளக்கு, எங்க குலசாமிடா நீ, எங்க கடவுள், எங்க செல்லம், நீ பொறந்ததும் தாத்தா, என்ன சொன்னாங்க தெரியுமாடா? அந்த மகாலட்சுமியே வரமா இந்த குடும்பத்தில் பொறந்திருக்கா!ன்னு சொன்னாரு! அந்த வார்த்தை எங்க எல்லாருக்கும் சத்திய வாக்கு! நீ தான் இந்த குடும்பத்தில மொதப் புள்ள, உன்னைப் பார்த்துத் தான், உன் தம்பி, தங்கைங்க

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

4 comments

  • :thnkx: தோழி! அதன் போக்கில் போக விட்டு பிடிப்பது என பெற்றோர், பிள்ளைகள் என்று இரு பக்கமும் இருக்கிறார்கள். காதல் வெல்லும்
  • Good decision!! Veetula irukuravangalukku therinjadhum nalladhu :yes: padichi oru nalla nilaikku vandhalum ivanga parents accept panuvangala doubt than but appo ena agumnu wait pani parkalam :yes: hope we can expect some smart move from both of them... interesting update ma'am 👏👏👏👏👏👏<br />Thank you.
  • facepalm :sad: epi. :Q: enna panna porangalo theriyavillai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.