This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
வளரணும், நீ தான் சரியான பாதையில் போகணும்டா! அவங்களுக்கு நல்ல வழிகாட்டியா இருக்கனும்டா! என்றார். “ரம்யா! நீ இது எல்லாத்தையும் விட்டுடுறேன்னு ஒத்துக்கிட்டன்னா நாளைக்கு காலேஜுக்குப் போ, இல்லையா, இனி காலேஜுக்குப் போகவே வேணாம். நாமளும் இவ படிப்புக்கான இறுதி ஆண்டு கட்டணத்தை செலுத்த வேணாம்னு அப்பா சொல்லவும், அம்மா “எதுக்கு இவகிட்ட முடிவெல்லாம் கேட்டுட்டு, பேசாமல் படிப்பை நிறுத்திட்டு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சுருவோம். இவள் எதாச்சும் பண்ணி நம்மை அசிங்கப்படுத்தும் முன்னே. இதுக்குத் தான் கோ-எட் காலேஜ்லாம் வேணாம், அவ இஷ்டத்துக்குப் படிக்க வைக்க வேணாம்னு சொன்னேன்!” என்று புலம்ப, “என்ன சத்தம்?” என்று கேட்டவாறே ரகு எழுந்து வர, எல்லாரும் அமைதியாக இருக்கவும், “இந்நேரம் என்ன பேசிட்டிருக்கீங்க, நிம்மதியா மனுஷனைத் தூங்கவிடாமல்!” என்றவன் கொட்டாவி விட்டவாறே மீண்டும் உள்ளே சென்றான். “நீயும் போய்ப் படு ரம்யா, காலைல உன் முடிவை சொல்லு!” என்ற அப்பாவிற்குப் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்று அழுதுகொண்டே இருந்தாள். தினேஷை எப்படித் தன்னால் மறந்து வாழ முடியும். கல்லூரிப் படிப்பையும் கைவிடவிடக் கூடாது. தற்போதைக்குப் படிப்பு முக்கியம், டிகிரி வாங்குவது முக்கியம், எதிர்காலம் முக்கியம். அம்மா வேறு திருமணம் என்று அச்சுறுத்துகிறார்கள். காதல் என்ற ஒன்றை மட்டும் ஒரு பெண் நினைத்துவிட்டால் எவ்விதமாக எமோஷனல் விஷயங்களைச் சொல்லி உணர்வுகளைக் கொண்டே மிரட்டுகிறார்கள் குடும்பத்தில் என்று நினைத்தாள். கண்மணி அவளின் அனுபவங்களை அவ்வப்போது சொல்லியிருந்ததால், குடும்பத்தில் எப்படியெல்லாம் அறிவுரை சொல்வார்கள் என்பதை ரம்யாவால் யூகிக்க முடிந்தது. தானும் எதிர்ப்பு, மறுப்பு என்றெல்லாம் குரல் கொடுத்துப் பார்த்தால், எதையும் மதிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டு யாரேனும் தலையில் கட்டிவைத்து விடுவார்கள்.முதலில் படிப்பை மட்டும் முடிப்பதை நினைப்போம், மற்றவற்றை சமயம் வருகையில் பார்த்துக் கொள்ளலாம். இதெல்லாம் பற்றி ஆழ்ந்து யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். காலையில் எழுந்தவள், அம்மா நான் படிக்கப் போறேன். படிக்க மட்டும் போறேன் என்று உறுதியான குரலில் சொன்னாள்.
அவள் காதில், கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றித் தருமாறு அம்மா சொல்லவும், எதற்கென்று புரியாமல் கழற்றிக் கொடுத்தாள். “நீ சும்மா சாதா வளையல், மணியைப் போட்டுட்டுப் போ, எல்லாம் தங்கத்தைப் போட்டுப் போனாத்தான் வசதியான வீட்டுப்பொண்ணுன்னு நினைச்சிட்டுப் பின்னாடியே வர்றானுங்க!” என்று அம்மா சொல்ல, கம்மல், செயின், மோதிரம் என மூன்றையும் கழற்றிக் கொடுத்தாள். தினேஷுக்கும் தனக்குமுள்ள பேரன்பில் பணம், நகை என்ற விஷயம் எல்லாம் ஒன்றுமேயில்லை என்பது
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.