This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
ஆதுரமாகத் தடவிக் கொண்டிருந்தாள் ரம்யா. அவன் கண்ணீரின் ஈரம் தன் உடையில் படவும், துடித்தவளாய் அவன் முகம் நிமிர்த்தினாள், “என்னை விட்டு நீயும் போயிட மாட்டியேம்மா!” என்று அவன் கேட்க, “எப்பவுமே போக மாட்டேன்!” என்று அவன் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டாள்.
“சீக்கிரம் இரண்டு பேரும் வேலைக்கு சேர்ந்து, ரெண்டு பேர் குடும்பத்தையும் சம்மதிக்க வச்சு, கல்யாணம் பண்ணிட்டு, எப்பவுமே நீயும் நானும் ஒண்ணாவே சேர்ந்திருப்போம். இங்கிருந்து படிச்சு முடிச்சுப் போனதானே அதெல்லாம் நடக்கும், நம்ம அச்சுக்குட்டி மாதிரி அழகா புள்ளையெல்லாம் பெத்துட்டு, நாமளும் அம்மா,அப்பான்னு ஆகி , அப்புறம் அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி, பேரக் குழந்தைகள் பொறந்து, தாத்தா, பாட்டியாகி இன்னும் எவ்வளவு இருக்கு. இது தான் அதுக்கெல்லாம் ஸ்டார்டிங் பாய்ன்ட். மனசுல வச்சுக்கோ!” ரம்யா அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு மெதுவான குரலில் நிதானமாகச் சொல்லவும் தினேஷ் புன்னைகைத்தான். என் முட்டக்கண்ணி சொல்றது சரிதான் என்றவன், நேரமாச்சு, யாராச்சும் வரதுக்குள்ள கிளம்புவோம் என்று எழுந்தான். அவளும் எழவும், “சாரி ரம்யா, உன்னோட அனுமதி கேட்காமல் இதை உனக்குத் தர்றதுக்கு!” என்றவாறே அவள் முகத்தைக் கைகளால் பிடித்தவன்,அவள் இதழ்களில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்துவிட்டு, படியிறங்கத் தொடங்கினான். ரம்யா, படிக்கட்டுல பார்த்து பத்திரமா இறங்கு. என்று சொன்னவாறே படிகளில் இறங்கிச் சென்றான். சில நொடிகள் அதிர்வில் இருந்தவள், சுயஉணர்வு வந்தவளாய் தனக்குத்தானே புன்னகைத்தவள், நிதானமாக தனது வகுப்புக்குச் சென்றாள்
இறுதி நாளில், அவளின் வகுப்பில் ஒவ்வொருவரும் தமது நினைவுகளை வகுப்பில் பேசினர். நண்பர்களும் தோழிகளும் கண்ணீர் சிந்தி தங்கள் நட்பின் தருணங்களை நினைவுகூர்கையில் பிரிவு மிகக் கடினமானதாகத் தோன்றியது. நான்கு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. கல்லூரியைப் பிரிவது, கல்லூரி நட்புக்களைப் பிரிவது வலி மிகுந்ததாய் இருந்தது. இறுதித் தேர்வு எளிதானது எனினும் சரியாகவே எழுதவில்லை ரம்யா. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற சிந்தனையிலேயே இருந்தவள், கண்ணீர் உகுத்து தேவி, கண்மணி என தன் உயிர்த்தோழிகளுக்குப் பிரியாவிடை கொடுத்தாள்.
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
தொடர்வேன்
Next episode will be published on 2nd May. This series is updated weekly on Sunday mornings.
Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.