This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
அறையில் வைத்திருந்த செல்போனும், ப்ரஜெக்ட் சிடியும், கண்ணிமைக்கும் நேரத்தில் திருடப்பட்டும், சிறிது தளராமல் செமினாரையும் சிறப்பாக முடித்து விட்டதில் பெரிய பாரமே இறங்கிவிட்ட நிம்மதி ஏற்பட்டது ரம்யாவுக்கு. முன்னொரு செமெஸ்டரில், மறுநாள் தேர்வு என்னும் நிலையில், அவளின் தேர்வுக்கான சப்ஜெக்ட் புக்கையே யாரோ எடுத்துச் சென்று விட, அச்சமயத்திலும் சிறிதும் அசராமல், வகுப்பில் எடுத்த நோட்ஸ் மட்டுமே வைத்துப் படித்தே மறுநாள் வந்து தேர்வை நன்கு எழுதிய திடமானவள் ரம்யா. படிப்பில் இருந்த ஆற்றல் வாழ்க்கையில் போராடவும் அவளுக்கு இருக்குமா என்பதுதான் அவளின் மிகப்பெரிய கேள்வியே, எனினும் தினேஷின் பக்கபலம் அவளுக்குத் துணையாக இருக்கும் என்ற மனத்தெம்பும் நிறையவே இருக்கத் தான் செய்தது.
கண்மணிக்கும் இன்னொரு கம்பெனியில் வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைத்துவிட்டது. கார்த்திக்குக்கு எந்த கம்பெனியும் அப்படி வரவேயில்லை. தினேஷின் திட்டம் இறுதி செமெஸ்டர் தேர்வுகள் முடிந்ததும், சென்னையில் அண்ணன் ராஜேஷின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து வேலை தேடிக் கொள்வது. இறுதி வாரம் வரவுமே, கல்லூரியின் நிறம் மாறியதைப் போலானது. எல்லாரும் எதோ கனத்த இதயத்துடன் இருப்பது போல் சோக முகத்துடன் இருந்தனர். கவலைகளின்றித் திரிந்த கல்லூரிக் காலங்கள் முடிந்து, எதிர்காலம் பற்றிய அச்சங்கள் ஆக்கிரமிக்க மாணவ, மாணவிகளின் முகங்கள் புன்னகை தொலைத்து மௌன ஓவியங்களாய் மாறின. வகுப்பில் அனைவரும் ஆட்டோக்ராப் நோட்டுக்களையும், ஸ்லாம் புக்குகளையும் தங்களுக்குள் பரிமாற்றிக் கல்லூரி நினைவுகளை வார்த்தைகளில் பகிர்ந்து கொண்டனர். ரம்யாவுக்கும் தினேஷை இனி அடிக்கடி பார்க்க முடியாது என்ற கவலையிருந்தாலும், ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கத்துக்கான ஆரம்பம் என்ற சிந்தனையும், தங்கள் வேலை, திருமணம் என்று அடுத்தத்தடுத்த படிகளுக்குத் தங்கள் காதலைக் கொண்டு செல்ல இதெல்லாம் கடந்து தான் ஆகவேண்டும் என்றும் புரிந்தது.
அன்றைய தினம், வகுப்பின் இறுதி தினம், அதன் பின்னர் ஸ்டடி ஹாலிடேஸ், செமெஸ்டர் தேர்வு என கல்லூரிப் படிப்பின் இறுதியை நோக்கி செல்லும் நாட்கள். அது கல்லூரி வகுப்புகளின் கடைசி தினம் என்பதால் என்னவோ, ரம்யாவுக்கு முதல் செமெஸ்டரின் கடைசி நாள் நினைவுக்கு வந்தது, தினேஷ் தன்னிடம் காதலைச் சொன்ன நாள் அது. அவன் காதலைச் சொன்ன அந்த பர்ஸ்ட் இயர் ப்ளாக் மாடிப்படிகளில் சென்று கொஞ்ச நேரம் தனியாக அமரவேண்டும் என்று தோன்றியது. அம்மாவிடம் கல்லூரிக்குச் சீக்கிரம் கிளம்பிச் சென்று, சில வேலைகளை முடிக்க வேண்டியிருப்பதாகக் கூறியவள்,ஏழு மணிக்கே அரசுப் பேருந்தில் தான் மட்டும் புறப்பட்டுச் சென்றாள். மெதுவாக கல்லூரியின் வளாகத்தில் நடந்தவள், இனிமேல் இது போல் கல்லூரி மாணவியாக நாம் இங்கு வரப்போவதில்லை என்று தோன்ற, ரம்யாவுக்கு
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.