This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
மதியம் வரை ப்ராஜெக்ட், ஹாஸ்டல் வரவும் கொஞ்ச நேரம் படிப்பு என்றே நேரத்தை வகுத்துக் கொண்டவள், மாலையில் அவளும் தேவியும் ஹாஸ்டலில் இருந்து நடந்தே மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போவதை வழக்கமாக வைத்தாள்.
ஒவ்வொரு முறை சன்னதியின் வெளியில் நிற்கையிலும் தினேஷ் தன் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டதே அவளின் நினைவுக்கு வரும். அந்த நாள் நிஜத்தில் பலிக்க தினமும் மீனாட்சி அம்மனிடம் மனதார வேண்டுவாள். இரவு சாப்பிட்டுவிட்டு விரைவில் படுத்து, ஏதேனும் நல்ல கனவுகளில் லயிக்கலாம் என்றே தூங்க முயற்சிப்பாள். தன் மற்ற தோழிகள் கண்மணியும் சத்யாவையும் கூட இந்த ஹாஸ்டலில் சேர்ந்திருந்தால் நேரம் போய்விடும் என்று தோன்றும். தேவிக்கு அந்த ஹாஸ்டலில் இருந்து எப்போதடா வீட்டுக்குப் போவோம் என்றிருக்கும், அடிக்கடி தேவிதான் செல்போனில் இருந்த எப்.எமில் பாட்டுக் கேட்பாள். ப்ராஜெக்ட் செய்து முடிக்க ஒரு வாரமே இருக்கவும், ரிப்போர்ட்டைக் கல்லூரியில் சென்று எழுதலாம் என்று இருவரும் முடிவெடுத்தார்கள்.
மாலை நேரப்பொழுது. ஹாஸ்டலில், எப்போதும் போல் எப்.எம்.மில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் தேவி, “நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்! நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்!” ஹாஸ்டல் ரிசெப்ஷன் போனில் ரம்யாவிற்கு அழைப்பு வந்திருப்பதாக வார்டன் அந்த தளத்தின் இண்டர்காமில் கூப்பிடவும், கீழே இறங்கிச் சென்றாள். அம்மாவும், அப்பாவும் செல்போனில் தான் கூப்பிடுவார்கள். தன்னை யார் இந்த ஹாஸ்டல் எண்ணில் அழைப்பது என்று யோசித்தவாறே எடுத்தவளுக்கு ஆச்சரியம், அந்த போனில் அழைத்தது ரஞ்சன், “ஹே அண்ணா! நீயா? எப்படி இருக்க? இந்த நம்பர் எப்படிக் கிடைச்சது!” என்று வியக்க, “ஒரு நிமிஷம் லைன்ல இரும்மா..உன்கிட்ட ஒருத்தர் பேசணும்!” என்று ரஞ்சன் ரிசீவரைக் கைமாற்ற, மறுமுனையில் கேட்டது அவளின் உயிர் தேடிய குரல். தினேஷின் குரல், “எப்படி இருக்க?” அவனின் கேள்வியில் உடலெல்லாம் பூப்பூத்தது போல் மலர்ச்சி. நல்லா இருக்கேன்டா, நீ? என்றவளிடம் நானும் நல்லா இருக்கேன். உன் கிட்ட பேசலாம்னு ரஞ்சன் தான் கூட்டிட்டு வந்தான். உன் கிளாஸ்ல யார்கிட்டயோ கேட்டு இந்த நம்பரை புடிச்சிட்டான். அவனுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும் என்றான் தினேஷ். சீக்கிரம் காலேஜுக்கு வா! உன்னைப் பார்க்கணும் போல இருக்கு ரம்யா! என்றான். “எனக்கும்தான் தினேஷ் ! ரொம்ப நேரம் இங்கே பேச முடியாது. இது ரிசப்ஷன் போன். அடுத்த வாரம் காலேஜ்ல வந்துதான் ரிப்போர்ட்ல ஒர்க் பண்ணுவேன். சீக்கிரமா பார்ப்போம்! என்றவள்,. ஒரு நிமிஷம் தினேஷ். சாப்பிட்டியா? என்று கேட்க. ம் என்றான். நீ எதையும் பத்தி கவலைப்படாத, நல்லா சாப்பிடு என்றான். சரி போனை அண்ணாகிட்ட கொடு என்றாள்.
ரஞ்சன் வாங்கவும், “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!” என்றாள். உனக்கு எப்போ உதவி வேணும்னாலும் நீ கேட்கலாம், நீ கேட்காட்டியும் நானே செய்வேன்.பிறகு பார்ப்போம் என்று
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.