தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 23 - முகில் தினகரன்
மடத்துக்குளம்.
சகாக்களுடன் தென்னந்தோப்பில் அமர்ந்து, ஜாலியாய் தென்னங்கள் அருந்திக் கொண்டிருந்த ரம்யாவின் அண்ணன் மனோகரனின் மொபைல் அதிர, “எவண்டா அவன்?” என்று திட்டிக் கொண்டே எடுத்துப் பேசினான். “ஹல்லோ....”
“மனோகரா...அன்னம்மாவைக் கொல்லப் போன நீ அவளை மட்டும்தான் கொன்னிருக்கணும்!...ஆனா நீ....அவளோட சேர்த்து ரெண்டு பசு மட்டையும், ரெண்டு கன்னுக்குட்டியையும் கொன்னுட்டே...அந்தப் பாவத்துக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்”
இணைப்பு உடனே துண்டிக்கப்பட, நெற்றி சுருக்கினான் மனோகரன்.
“யாரு மனோ?” உடனிருந்தவன் கேட்க, அவனிடம் உண்மையைச் சொன்னால், தனக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் வெளியே கசிந்து விடும், என்று பயந்த மனோகரன், “ஒண்ணுமில்லை...ஏதோ பிரைவேட் பேங்காம்...லோன் வேணுமா?ன்னு கேட்கறாங்க” பொய்யை சொல்லி வைத்தான். ஆனாலும், அவன் அடி மனதில் இனம் புரியாத ஒரு திகில் குடி புகுந்தது.
“எப்படி?...எப்படி அந்த ரகசியம் வெளிய போச்சு?...நடு ராத்திரியில் யாருக்கும் தெரியாமல் தானே போய் மாட்டுத் தொழுவத்துக்கு தீ வெச்சேன்!...மாட்டை வெளிய கட்டிட்டு அன்னம்மாவை மட்டும் உள்ளார வெச்சுக் கொளுத்தினா...சந்தேகம் வரும்!ன்னு ரெண்டு மாட்டையும், ரெண்டு கன்னுக்குட்டியையும் சேர்த்து வெச்சுக் கொளுத்தினேன்!...அப்படியும் எவனோ மோப்பம் பிடிச்சிட்டானே?...”
“என்ன பங்காளி திடீர்னு மூஞ்சி பேஸ்தடிச்ச மாதிரி ஆயிட்டுது...என்ன சமாச்சாரம்?” சக தோழன் கேட்டான்.
“ஒண்ணுமிலை...திடீர்னு வயித்தை என்னமோ செய்யுது...அதான் முகம் மாறிப் போச்சு” சமாளித்தான் மனோகரன்.
“அப்படின்னா...கள்ளு குடிக்கறதை நிறுத்திக்க...போதும்...!...”
“சரிடா” என்று சொல்லி விட்டு, சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை வெளியில் எடுத்துப் பற்ற வைத்தான்.
மீண்டும் போன் அதிர்ந்தது.
“மறுபடியும் அந்த பேங்க்காரன்தான் போலிருக்கு!...அவனை ரெண்டு வாங்கு வாங்கினாத்தான் கூப்பிடுறதை நிறுத்துவான்” என்று சொல்லிக் கொண்டே மொபைலை எடுத்துக் கொண்டு தனியே நடந்தான் மனோகரன்.
“ஹலோ...மனோகரா....உனக்கு கீழ் சாதிக்காரங்களைக் கண்டாலே பிடிக்காது!...அப்புறம்