கிளம்பும் போது தனசேகர் கேட்டான்.
“நீ இப்படிக் கேட்கறதுதான் பிரச்சினையே!...” என்றான் முரளி.
“அப்படியில்லைடா...உன் உழைப்பும்...சம்பாத்தியமும்தான் உன் குடும்பத்துக்கே ஆதார வருமானம்!..உங்க அம்மாவும் தங்கச்சியும் உன்னை நம்பித்தான் இருக்காங்க...நீ பாட்டுக்கு என் கூட சுத்திட்டு வேலைக்குப் போகாமலே இருந்தா உன்னோட சம்பளம் குறையும்...அப்புறம் பற்றாக் குறை வரும்!...அவங்க என்னைத் திட்டுவாங்க!... “சரி...நான் ஒரு அமௌண்ட் குடுக்கறேன் சமாளிச்சுக்கடா...”ன்னு சொன்னாலும் நீ வாங்க மாட்டேங்கறே!” தனசேகர் யதார்த்தத்தைச் சொல்ல,
“க்கும்...அப்படியே நான் பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேன்!...நான் போகலைன்னா எல்லாமே ஸ்தம்பிச்சு நின்னிடும்!...அடப் போடா...ரைஸ் மில்லுக கணக்குப் பிள்ளை உத்தியோகம்....இதுல லீவு போட்டா தலை சிதறிடாது...நீ மொதல்ல பைக்கை ஸ்டார்ட் பண்ணு” என்றான் முரளி.
பைக்கில் போகும் போது, “ஆமாம்...இன்னிக்கு எந்த ஏரியாவைக் கவர் பண்ணப் போறோம்?” முரளி கேட்டான்.
“இன்னிக்கு அந்தக் கிழக்குச் சீமை போறோம்...பொண்ணு வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கறோம்” என்றான் தனசேகர்.
“டேய்...டேய்...அதெல்லாம் நாம போயி வைக்கற இடமல்ல....வருங்கால சம்மந்தி வீட்டுக்கு...உங்க அப்பாவும், அம்மாவும்தான் போகணும்!...அதுதான் மரியாதை” என்றான் முரளி பைக் சத்தத்தையும் மீறி கத்தலாய்..
“ஏண்டா...கல்யாண மாப்பிள்ளை நான்!...நானே நேர்ல போய் பத்திரிக்கை வைக்கறேன்!...அதை விட என்னடா?” காற்றில் சட்டைக் காலர் படபடத்தது.
“அது முறையல்லடா சேகர்!...அவங்களும் பெரிய பண்ணையார் வம்சமல்லவா?..அவங்களுக்கு குடுக்க வேண்டிய மதிப்பையும்...மரியாதையையும் குடுத்தாகணும்டா” முரளி கெஞ்சலாய்ச் சொன்னான்.
“சரி...சரி...பொலம்பாதே....இப்ப நான் அங்க போறது..என் மாமனாருக்கும் மாமியாருக்கும் பத்திரிக்கை வைக்கறதுக்கு இல்லை..!...அந்த வேலையை என்னோட அப்பாவும்...அம்மாவும் பார்த்துக்கட்டும்!...” என்று சொல்லி விட்டு தனசேகர் நிறுத்த,
“வேற யாருக்கு?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் முரளி.
“ம்ம்...என்னோட வருங்கால மனைவி...மல்லிகாவிற்கு” சொல்லி விட்டுச் சிரித்தான் தனசேகர்.
“அடப்பாவி!...அங்க போறதுக்கு எதுக்குடா என்னைக் கூடக் கூட்டிட்டுப் போறே?...வேண்டாம்!டா...அது சரிப்பட்டு வராதுடா” பலமாய் மறுத்தான் முரளி. அவன்