தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 27 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
கல்லூரித் தோழிகள் பிரிந்து விட்டாலும், எல்.கே.ஜி. முதல் இன்று வரை பிரியாமல் இருப்பது சத்யா மட்டுமே. ஆனால் சத்யாவின் அம்மாவிற்கு ஒரு சர்ஜரி செய்ய வேண்டிய நிலை ஏற்படவும், அவரைக் கவனிக்கும் பொறுப்பு சத்யாவிற்கு என்றானது. அம்மாவின் உடல்நிலை சரியாகும் வரை, அவள் தனது ஆர்ட்ஸ் படிப்பில் ஒரு செமெஸ்டர் ப்ரேக் எடுக்கும்படி ஆகிவிட்டது. மூன்றாம் ஆண்டு படிப்பு ஒரு வருடம் தள்ளிப் போனதால், கலைப் பிரிவில் பயின்ற சத்யாவுக்கும் இதுவே இறுதி ஆண்டுப் படிப்பு. வீட்டில் அப்படியே அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
மே மாதம் பரீட்சை முடிந்த உடனே சிலருக்கும், மேலும் சிலருக்கு ஜூனில் இரண்டாம் வாரத்தில் வேலைக்குச் சேரவும் பணி நியமன ஆணை வந்துவிட்டது. கண்மணியும் தான் பணியில் சேர்வதற்கு சென்னை கிளம்புவதாக போன் செய்திருந்தாள், கார்த்திக்கும் சென்னையில் இருப்பதாகவும் ஐடி நிறுவன பணி என்றாலும் எடுத்துக் கொள்ளும் நிலைமையில் தான் கார்த்திக் இருப்பதாக சொல்லவும், தினேஷுக்கும் சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்ததா என்றே தெரியவில்லை. இந்நிலையில் ரம்யாவிற்கும் இன்னும் பணி ஆணை வரவில்லை. ஏனோ தான் படித்து முடித்துவிட்டு வீட்டில் பயனின்றி இருப்பதாக ஓர் உணர்வு. கல்லூரி முடிந்து விட்டதால், கழற்றிக் கொடுத்த நகைகள் அனைத்தும் திரும்ப அவளிடம் வந்தன. அவள் வேண்டாமென்று மறுத்தும், அம்மா கட்டாயப்படுத்தி அணியச் செய்தார். அப்பாவுடன் வங்கி செல்கையில் கால் கொலுசையும், பாட்டியுடன் கோவிலுக்குச் சென்ற போது காதில் இருந்த தங்க வளையத்தையும் தவற விட்டுவிட்டாள்.வீட்டில் யாரும் அதற்காகக் கோபிக்கவில்லை என்றாலும் தனது அசிரத்தையால் தானே தொலைத்துவிட்டோம் எண்ணி வருந்தியவள், ஏதேனும் வேலை செய்து அதற்காக பணத்தை தானே ஈடு செய்ய எண்ணினாள். பக்கத்தில் இருந்த டியூசன் சென்டரில் வேலைக்குக் கேட்கவே, அதை நடத்திவரும் ஆசிரியரும் மறுநாளில் இருந்து சேர்ந்து கொள்ளச் சொன்னார்.
அவள் வேலை கேட்டு சென்ற நாளின் மதியமே, கொரியரில் அப்பாயின்மென்ட் லெட்டர் வந்தது. டெக்னோசிஸ் பெங்களூர் கிளையில் வேலையிருக்கும் என்று முதலில் நேர்முகத் தேர்வில் சொல்லியிருந்தாலும் தற்போது வேலை சென்னையில் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு ரம்யாவுக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் தினேஷ் சென்னையில் தானே இருக்கிறான். தானும் அங்கேயே போகப் போவதை எண்ணி மகிழ்ந்தாள். என்ன தான் வீட்டை விட்டுக் வேலையில் சேரக் கிளம்புவது சந்தோஷமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் பயமும் சேர்ந்து கொண்டது. அம்மா, அப்பா, ரகு, உறவினர்கள்,என தினமும் தான் பார்க்கும் பழகும் மனிதர்கள் இல்லாத சூழலுக்குப் பழகுவது கடினமாக இருக்குமெனவும்
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.