This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
வளர்த்த அப்பாவைக் கூட இவ்வளவு தூரம் நினைக்காமல் இவன் மட்டும் எந்நேரமும் சிந்தனையை ஆட்கொண்டு நம்மைப் பைத்தியமாக ஆக்குகிறானே என்று நினைப்பாள். “உன் பார்வையில் பைத்தியமானேன் உன் வார்த்தையில் வாக்கியமானேன்!” தன் மனதுக்குள் பாடுவதாய் நினைத்து ஒரு நாள் தனது பணியிடத்தில் அமர்ந்து ரம்யா கொஞ்சம் சத்தமாகப் பாடிவிட, அருகிலிருந்த கியூப்களில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்து என்ன என்பதைப் போல் எட்டி அவளைப் பார்க்க , அச்சச்சோ என்று வாய் பொத்தினாள்.
வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட, அந்த வாரத்தின் சனிக்கிழமையில் அவளின் பிறந்தநாள், வெள்ளிகிழமை மாலையில் சொந்த ஊருக்குப் பேருந்தில் புறப்பட இருந்தாள். தினேஷ் பேருந்து நிலையத்துக்கு வருவதாகச் சொன்னான். பத்திரமா போயிட்டு வா என்று அவளை வழியனுப்பும் முடிவில் இருந்தவன் ஏனோ மனம் கேளாமல், மதுரை வரைக்கும் ஒண்ணாகவே சேர்ந்து போகலாம் என்று அவனும் பேருந்தில் ஏறிவிட்டான். ஜன்னலோரம் அவன் அமர்ந்துகொள்ள, அவனின் தோளில் சாய்ந்துவாறே அமர்ந்து வந்தாள் ரம்யா. சிறிது நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டவளை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டு.அவள் முதுகின் மேல் தலை கவிழ்த்து அவனும் தூங்கினான். இவளின் அருகாமையில் கிடைக்கும் நிம்மதியும், அரவணைப்பும் வேறெப்போதும் கிடைப்பதேயில்லை என்று நினைத்தான் தினேஷ். மதுரை வரவும் தனித்தனி சீட்களில் மாறிக் கொண்டனர். தனக்காக இவ்வளவு தூரம் அவன் வந்தது ரம்யாவுக்குப் பிடித்தது. ரம்யா நான் இங்கே என் ப்ரென்ட் ஒருத்தனைப் பார்த்துட்டு இன்னிக்கு ஈவ்னிங் கிளம்பிருவேன். இவ்வளவு தூரம் சொல்லாம கொள்ளாம நான் இப்படி வந்தது அண்ணனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான், நாளைக்குக் காலையில் நான் போய் வாசலில் நிக்கும் போதே, ஏன்டா இரண்டு நாள் நைட்ல ஏன் வீட்டுக்கு வரலன்னு கேட்பான். சைட்ல வேலை ரொம்ப அதிகம், அதான் அங்கேயே தூங்கிட்டேன்னு பொய்யைத் தான் சொல்லுவேன். நம்புவானோ நம்பமாட்டானோ. இன்னொரு நல்ல விஷயம். அண்ணி ப்ரெக்னன்ட் ஆ இருக்கிறதா மெசேஜ் பண்ணிருக்கான். இனி கொஞ்சம் அவன் போகஸ் அண்ணி மேலதான் ரொம்ப இருக்கும். அதனால் நான் சமாளிச்சுக்குவேன் என்றவன் தொடர்ந்து நீ பத்திரமா போய்ட்டு மண்டே மார்னிங் வந்து கால் பண்ணு. ஹேப்பி பர்த்டே என் முட்டக்கண்ணி என அவளுக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டு விடைபெற்றான். ஊருக்கு வந்தவள், ரகு, சித்தப்பா பிள்ளைகளான தம்பி தங்கைகளுடன் தன் பிறந்தநாள் கொண்டாடினாள். பாட்டி அவளைத் திருநீர் நெற்றியிலிட்டு ஆசிர்வதித்து, சீக்கிரம் கல்யாணம் ஆகணும். அதை என் கண்ணாரக் காணனும். அதுக்குத் தான் இந்த உயிரைக் கையில் புடிச்சிட்டு இருக்கேன் என்றார். அடுத்த வருடம் பிறந்தநாள் ஜோடியா வந்து என்கிட்டே ஆசீர்வாதம் வாங்கி நீ கொண்டாடனும் என்றார். அப்பாவும், இனிமேல் ஜாதகத்தை எடுக்க வேண்டியது தான் என சொல்லவும்,
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.