(Reading time: 13 - 25 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

அதிகமுள்ள இடங்களில் மட்டுமே  தினேஷை சந்திப்பாள். அவர்கள் இருவரும் தனித்துத் தெரிந்து விடக்கூடாது என்ற தன்னிச்சையான உணர்விருந்தது. சில நேரம் அவர்கள் சந்திக்கவே இயலாது. போனில் பேசியே காதல் வளர்த்தார்கள். ஏனோ தினேஷுக்கு ரம்யாவைப் பாடச் சொல்லிக் கேட்பது பிடிக்கும். “தாலேலோ பாடவே நீ தூங்கடா!” என்று அவள் தினமும் இரவில் அதே வரிகளைப்  பாடினாலும் சலிப்பின்றி அவனுக்கு அது இனிமையான தாலாட்டாகவே கேட்கும். இவர்கள் எந்தக் கவலையுமின்றி காதல் வளர்க்கையில், திடீரென ஓர் தடங்கல்.

ஒரு வெள்ளிக்கிழமை காலையில் புறநகர் ரயில் நிலையத்தில், ஆபீஸ் செல்ல எப்போதும் பிடிக்கும் மின்சார ரயிலுக்காக நடைமேடைப் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கையில் அம்மாவின் அழைப்பு, அன்று மாலையே கிளம்பி அவசரமாக  ஊருக்கு வரவேண்டும் என்று சொல்லவும், என்ன காரணம் என்று விவரம் தெரியாமல் தட்கல் டிக்கெட் ரயிலில் புக் செய்து அடித்துப் பிடித்து ஓடினாள் ரம்யா. ஊரை அடைந்து வீட்டுக்குப் போனதும் அவளுக்கு ஏக அதிர்ச்சி, அன்று மாலையில் அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாகக் கூறினார் அம்மா. புகைப்படம் ஒன்றைக் காட்ட, அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ரம்யா.  நல்ல வேளையாக அந்த வரனின் தாயாருக்கு ரம்யாவைப் பிடிக்கவில்லை. அவர் கேட்ட கேள்விகளுக்கு அவளும் வேண்டாவெறுப்பாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் வரதட்சணையும் அதிகமாக எதிர்பார்க்க, அப்பாவே அந்த வரன் வேண்டாமென்று முடிவெடுத்தார். மீண்டும் ஜாதகம் பார்க்கையில் ஒரு ஆறு மாதம் வரன் பார்ப்பதைத் தள்ளி வைக்குமாறு சொல்லவும், அப்பாவும் வரன் தேடுவதில் அவசரப்படவில்லை என்பதில்  ரம்யாவுக்கு நிம்மதி.

தினேஷ் மேற்படிப்பை முடிக்க இறுதி செமெஸ்டர் அது. பெங்களூரில் ஒரு கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய இன்டர்ன்ஷிப் கிடைத்தது. ரம்யா இங்கிருக்க தான் அங்கு போகவா என்று யோசித்தவனை ரம்யாவே அங்கு செல்லுமாறு சொல்லவும் துணிந்து கிளம்பிவிட்டான். ஆறு மாதங்களில் ஒரு ப்ராஜெக்ட்டை சிறப்பாக முடித்து விட்டு, சென்னைக்கு மீண்டும் வந்துவிட்டான், அதே கம்பெனியில் சென்னை கிளையில் நிரந்தரப் பணியுடன். இனியாவது அம்மா, அப்பாவிடம் தங்கள் காதலைப் பற்றித் தைரியமாகப் பேசலாம் என்று முடிவெடுக்கையில்,  தினேஷ் அவளைத் தன்னுடன் ஓரிடத்திற்கு வருமாறு அழைக்கவே ரம்யா முதலில் தயங்கினாள். பாண்டிச்சேரி அன்னை அரவிந்தர் ஆசிரமம் சென்று வரவேண்டும் என்று அவளிடம் சொன்னவன், தினேஷ் கல்லூரியில் படிக்கும் போது தன் வகுப்பு மாணவர்களுடன் அங்கு சென்று வந்ததாகவும், அந்த இடத்தில் இருக்கும் அமைதி அவனைக் கவர்வதாகவும் சொல்ல, ரம்யாவும் சம்மதித்தாள். இருவரும் திரும்பவும் ஒன்றாகப்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

8 comments

  • இனி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டியது தான் விரைவில்! :-) :thnkx: தோழி!
  • :D ethanai obstacles!! Pondicherry la matamal irukatum :yes: interesting update ma'am 👏👏👏👏👏👏 ippo flow fast agidichi :dance: aduthu enaagumnu parka waiting!!<br />Ivanga evalo sadhichalum ivanga parents support panuvangalanu theriyala....ivanga caste vachi illa reject panuranga steam <br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.