"டாட், ப்ளீஸ் காலம் டவுன்... இதெல்லாம் ரொம்ப பெயின்புல்ன்றது தெரியும், இருந்தாலும் இப்போ ரொம்ப காமா இருக்கணும் டாட்."
"இத யாருடா பண்ணது? அவனை....."
"இல்ல டாட் , யாருமே பார்க்கல, சுமதி அக்கா பாக்கறச்சே, அம்மா மயக்கமா விழுந்துட்டாங்க, அவங்களும் இந்த கத்திய பாக்கலேன்னு நினைக்கறேன். நான் அவங்கள தூக்கும்போதுதான் பார்த்தேன்." அவன் கண்களில் கண்ணீர், அப்துலோட கையை பிடித்து கசக்கி அவர்கள் இருவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.
ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தார்கள், அங்கே இருந்த ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு வேகமாக ஓடி வந்தான் அஜய், எதிரே வந்த நர்ஸிடம், "டாக்டர் அபயம் இருக்காங்களா?" என்று கேட்டான் .
"இருக்காங்க, இதோ இப்ப வர சொல்றேன்! " என்று நர்ஸ் ஓடினாள்
"டாக்டர் அபயம் வேகமாக வந்தாள்! "
"அஜய்! என்ன ஆச்சு?"
"இதை பாருங்க டாக்டர், எங்க அம்மாவை யாரோ...." என்று கையை காட்டினான்.
டாக்டர் அபயம் கிடு கிடுவென்று டிரீட்மெண்டை ஆரம்பித்தார்.. எந்த கேள்வியும் கேட்கவில்லை. டாக்டர் கத்தியை ஒரு நாப்கினால் பிடித்து எடுத்தார் அதை நர்ஸிடம் கொடுத்து ஒரு பாகில் போட்டு பத்திர படுத்தினார். கட்டு போட்டு வேண்டிய மருந்துகளை சலைன் மூலமாக ஏற்றினார். வெளியே வந்த டாக்டர் "அஜய், உங்க அம்மான்றீங்க ரொம்ப சின்னவங்களா இருக்காங்க?" என்று கேள்வி கேட்டார் .
"டாக்டர் அவங்க எப்படியிருக்காங்க அத முதல்ல சொல்லுங்க?"
"என்ன அஜய் பதட்ட படாதீங்க, அவங்க நல்லாயிருக்காங்க ஆனா வலி தெரியாம இருக்க அவங்களுக்கு லோக்கல் அனஸ்தேசியா கொடுத்திருக்கு,. கொஞ்ச நேரம் மயக்கத்துல இருப்பாங்க, ஆனா நீங்க உடனே போலீசுக்கு தகவல் சொல்லணும், சொல்லீட்டீங்களா?"
"இல்ல டாக்டர், எங்களுக்கு பயத்துல ஒன்னும் ஞாபகத்துல இல்ல டாக்டர்." அப்போது ஜாபரும், நிக்கத்தும், பதட்டத்தோடு உள்ளே நுழைந்தார்கள்.
"ராஜா, என் தனத்துக்கு எப்படியிருக்கு? ஹே அல்லா இந்த குழந்தைகளை நல்லா வையின்னு எத்தனை முறை துவா கேட்டருக்கேன், இப்படி வர விட்டுட்டியே?" என்று நிக்கத் கூறவும்.
"பாட்டிம்மா, உங்க வேண்டுதல் நல்லாத்தான் உதவி இருக்கு. அம்மாக்கு பெரிசா ஒன்னும் ஆகல அதனால கவலை படாதீங்க, அவங்க நல்லாயிருக்காங்கன்னு இப்பத்தான் டாக்டர் சொல்லிட்டிருக்காங்க பாட்டிம்மா!"என்று அஜய், நிக்கத்துக்கு எடுத்து கூறினான்.