"ஹலோ ஜாஃபர் சார், எப்படியிருக்கீங்க?"
"என்ன விடுங்க டாக்டர் என் மருமக தனம் எப்படியிருக்கா?"
"அவங்க உங்க மருமகளா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் டாக்டர் .
"ஆமாம் டாக்டர், என் மகன் அப்துலோட மனைவி!"
'அப்போ அஜய்?"
'அவன் என் பேரன்தான்" அவரை ஒரு முறை ஏறிட்டு நோக்கிவிட்டு, " கூடவே ஒரு குட் நியூஸ் இருக்கு! " என்று மெதுவாக கூறினார் டாக்டர்.
"என்ன விஷயம் டாக்டர்?" என்று எல்லோரும் ஒரே குரலில் கேட்கவும்,
"உங்க மகன் எங்க ஜாஃபர் சார்?"
"ஆமாம், அஜய் அப்துல் எங்க?" என்று ஜாபர் கேட்டார்.
அவன் கை காட்டிய இடத்தில் அப்துல் தரையில் அமர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த ஜாஃபருக்கும் நிக்கத்துக்கும் கண்ணீர் துளிர்த்தது.
"அவரை கூட்டிட்டு வாங்க அஜய், நான் குட் நியூஸ் சொல்றேன்." என்று கூறவும் எல்லோருக்கும் ஓரளவு புரிந்திருந்தது.
அஜய், அப்துலிடம் எடுத்து கூறி கூட்டிக் கொண்டு வந்தான் .
அவன் வந்ததும், அவனை பார்த்து விஷமமாக சிரித்தார் டாக்டர் அபயம், " பிறகு அவனிடம், " உங்க மனைவி இப்ப நல்லாயிருக்காங்க ஒன்னும் பயப் படவேண்டாம், ஆனா....."
"ஆனா என்ன டாக்டர்?" என்று பயத்துடனே கேட்டான் அப்துல்.
"அவங்கள இனிமே ஜாக்கிரதையாக பார்த்துக்கணும்!" என்று கூறியதும்,
"என் தனத்துக்கு என்ன ஆச்சு டாக்டர், அவளை ஜாக்கிரதையா பார்த்துக்குற அளவு அவளுக்கு என்ன ஆச்சு டாக்டர்?" என்று பதட்டத்தோடு கேட்டான் அப்துல்.
"பின்ன, கர்பம்னா சும்மாவா? எத்தனை குழந்தைகளை பெத்தாலும், ஒவ்வொரு கர்பமும், பிரசவமும் பெண்களுக்கு மறுஜென்மம் தான்" என்று கூறியதை கேட்டதும், சந்தோஷத்தில், அஜயை தூக்கி கொண்டாடினான் அப்துல்
"டாட், இது ஹாஸ்பிடல் நானும் ஒன்னும் சின்ன பையனில்ல இப்படி தூக்கறதுக்கு."
"நீ என் மகன்டா, நீ கேட்டதை நான் கொடுத்துட்டேன்.. ஐ அம் சோ ஹாப்பி, அம்மீ நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் அம்மீ.." என்று அம்மாவை அனைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அப்போது, இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வந்தனர் .
"வாங்க இன்ஸ்பெக்டர்!" என்று ஜாஃபர்த்தான் பேசினார்.
"சொல்லுங்க என்ன ஆச்சு? பேஷண்ட் எப்படியிருக்காங்க? அவங்கள நாங்க பார்க்கலாமா?"