தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 15 - முகில் தினகரன்
அங்கு நிகழும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புரியாத புதிர்களாகவும் அதிர வைக்கும் பயங்கரங்களாகவும் உதிரத்தை உறைய வைக்கும் உச்சங்களாகவுமே இருக்க ஏ.சி.தீனதயாள் கேட்டார்
“நம்பூதிரி அவர்களே!...இதுக்கு...இந்த..இந்த..ரத்தத்துக்கு...என்ன
அர்த்தம்?...அல்லது...என்ன காரணம்?...சொல்ல முடியுமா உங்களாலே?” தீர்க்கமாய்க் கேட்டார்.
தன் தலையை மேலும் கீழும் ஆட்டிய நம்பூதிரி “சொல்ல முடியும்...ஆனா சொன்னா நீங்க பயந்துட மாட்டீங்களே?” திருப்பிக் கேட்டார் நம்பூதிரி. கேட்கும் போது அவர் தலை ஆடிய விதமும் அவரது முன் கொண்டை ஆடிய விதமும் சற்று வித்தயாசமாகவே இருந்தது.
“ஹூம்..விஷயத்தைச் சொல்லுங்க மொதல்ல!” எரிச்சலுடன் சொன்னார் ஏ.சி.
“இந்தக் காம்ப்ளக்ஸின் ஏதோ ஒரு இடத்துல...ஏதோ ஒரு சுவற்றுக்குள்ளார...செங்கற்களுக்குப் பதிலா...பிரேதங்களை அடுக்கிக் கட்டியிருக்காங்க!” நம்பூதிரி சொல்லி முடிக்கும் முன்
“அய்ய்ய்யோ..”அலறி விட்டார் சாம்பசிவம்.
சீரியஸானார் ஏ.சி.தீனதயாள் “அய்யா...நம்பூதிரி...உங்க வார்த்தைகளை நாங்க எந்த அளவுக்கு நம்பறது?”
“எலுமிச்சம்பழத்தைப் பார்த்தீங்கல்ல?...அந்த அளவுக்கு நம்புங்க!” விழிகளை உருட்டிப் பார்த்தபடியே சொன்னார் அவர்.
“ம்..பார்த்தேன்!...பட்...அதை மட்டும் வெச்சு... “இங்க சுவர்களுக்குள்ளார பிரேதங்கள் இருக்கு!”ன்னு...சொல்றதை...ஏத்துக்க கொஞ்சம் தயக்கமாய் இருக்கு!...ஆக்சுவலா....லாஜிக் உதைக்குது!”
ஏ.சி.தீனதயாள் அப்படிச் சொன்னதும் “விருட்”டென எழுந்த நம்பூதிரி
“அய்யா...சாம்பசிவம்!...நான் புறப்படறேன்!...நீங்க காவல்துறையை வைத்து...இங்குள்ள அமானுஷ்யங்களைக் கண்டுபிடிச்சுக்கங்க...அழிச்சுக்கங்க...!” என்று சொல்லி விட்டு வெளியேறப் போக
பாய்ந்து வந்து அவரைத் தடுத்து நிறுத்திய சாம்பசிவம் “சாமி...சாமி...அவரு போலீஸ்காரர்...அந்த உத்தியோகம் அவரை அப்படித்தான் பேச வைக்கும்!...நான் சாதாரண மனிதன்!..நான் நம்பறேன் உங்க வார்த்தைகளை!...சொல்லுங்க சாமி!..எந்த செவுத்துல அந்த மாதிரி பொணங்களை அடுக்கி வெச்சிருக்காங்க...சொல்லுங்க சாமி!” கெஞ்சலாய்க் கேட்டார்.
சாம்பவசிவத்தின் கெஞ்சலால் சற்றுக் கோபம் தணிந்த நம்பூதிரி
“இன்று இரவு முழுவதும் நான் இங்கேயே இருக்கிறேன்!...இருந்து இங்கு நடக்கும் அமானுஷ்ய ஆட்டங்களைப் பார்க்கிறேன்!...பார்த்து விட்டு நாளை காலை சொல்கிறேன்!...எந்தெந்த