(Reading time: 7 - 13 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

துண்டித்தார் ஏ.சி.

****

சாம்பசிவமும் ஏ.சி.தீனதயாளும் அலுவலக அறையில் காத்திருந்தனர்முகிலனின் சாவு ஏற்படுத்தியிருந்த கொடூர அதிர்ச்சியிலிருந்து லேசாய் விடுபட்டு அன்றுதான் டியூட்டியில் ஜாய்ன் பண்ணியிருந்தாள் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் கல்பனாஆனாலும் அவள் முகத்தில் இன்னும் அந்தப் பீதி விலகாமலே இருப்பது போல் தோன்றியது ஏ.சி.க்கு.

 “என்ன சாம்பசிவம்...நம்பூதிரி எத்தனை மணிக்கு வர்றதா சொன்னார்?” ஏ.சி.மணிக்கட்டைப் பார்த்துக் கொண்டே கேட்க,

 “மூணு மணிக்கு வந்துடறதா சொன்னார் சார்!என்று சாம்பசிவம் சொல்லி முடிக்கும் முன் அந்த அறைக்குள் நுழைந்தார் நம்பூதிரி.

அவரைப் பார்த்ததும் கல்பனாவின் முகத்தில் இன்னும் கொஞ்சம் பீதி வந்து அப்பிக் கொண்டது

இறுக்கமான முகத்துடன் நிதானமாக வந்து அமர்ந்த நம்பூதிரி தன் பேச்சைத் துவக்கும் முன் கல்பனாவைப் பார்க்க

அவளும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு வெளியேறினாள்.

 “என்ன சாம்பசிவம்...நான் சொன்ன விஷயங்களை காவல்துறை அதிகாரியிடம் சொன்னீர்களா?” நம்பூதிரி இடிக் குரலில் கேட்டார்.

 “ம்...சொல்லி விட்டேன் சாமீ

 “அவர்...நம்பியிருக்க மாட்டாரே?” நம்பூதிரியின் கடைக்கண் பார்வை ஏ.சி.தீனதயாள் மீது விழுந்தது.

 “இல்லை.சாமி...நீங்க நினைக்கற மாதிரி இல்லை!...அவரே சுவர்களை இடிக்க ஆட்களை ஏற்பாடு பண்ணியிருக்கார்!

 “நல்லது...நல்லது!

அடுத்த சில நிமிடங்களில் சுவர்களை இடிப்பதற்கான உபகரணங்களுடன் ஆட்கள் வந்து இறங்கினர்.

மூன்றாம் தளம் பரபரப்பானது.

தொடரும்...

Next episode will be published on 11th May. This series is updated weekly on Tuesdays.

Go to Neeyaga naan naanaga nee story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.