தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 16 - முகில் தினகரன்
மூன்றாம் தளத்தினுள் நிதானமாகப் பிரவேசித்த நம்பூதிரி அந்த ஸ்போர்ட்ஸ் கடையினுள் மெல்ல நுழைந்தார்.
கடையின் நடு மத்தியில் நின்று கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு முணுமுணுக்க ஆரம்பித்தார்.
ஆழியலைகள் உயிர் பெற்று
ஆதியந்தம் முடித்து விடும்
நாழி யசைவில் எரிமலைதான்
நஞ்சைபுஞ்சை எரித்து விடும்
ஊழியணிகள் பூண்டு விடின்
உயிரும் குடிக்கும் இயற்கையுமே
தாழியுடைந்த சிதறல் போல்
தழைக்குமினமே சிதைந் திடுமே!
பிறகு கண்களை மூடிய நிலையிலேயே நின்ற இடத்தில் இருந்தவாறே ஒரு சுவரைக் கை காட்டினார்.
ஏ.சி.தீனதயாள் சமிக்ஞை காட்ட அந்தச் சுவற்றை இடிக்க ஆரம்பித்தனர் ஆட்கள்.
அரை மணி நேர இடிப்பிற்குப் பின்
“சட...சட” வென்று சுவற்றிற்குள்ளிருந்து சரிந்து விழுந்தது ஒரு பழுப்பு நிற எலும்புக் கூடு.
“ஆஆஆ...”வென வாயைப் பிளந்தார் சாம்பசிவம்.
அந்த ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை பர்க்கும் ஒரு பெண் “தொபீர்”என்று மயங்கி விழுந்தாள்.
ஏ.சி.திரும்பி நம்பூதிரியையே பார்த்தார்.
அதே இடத்தில் அதே நிலையில் கண்களைத் திறக்காமல் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேல் அமைதியாய் நின்று கொண்டிருந்த நம்பூதிரி திடீரென்று தன் கையை வேறொரு சுவற்றை நோக்கி நீட்டினார்.
அந்தச் சுவரும் இடிக்கப்பட்டது.
அங்கிருந்து இரண்டு எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டன.
நம்பூதிரி கண்களை மூடியவாறே அந்தக் கடைக்கு வெளியே வந்து நான்காவது தளத்திற்குச் செல்லும் படிகளில் ஏறி ஆறாவது படியில் நின்று தனது வலது கையால் அங்கிருந்த சுவற்றைத் தடவிக் காட்ட
ஏ.சி. ஆணையிட்டார்.
அங்கும் இடிப்புப் பணி அரங்கேற மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் சுவற்றுச்