என்ன பண்ணிட்டிருந்தீங்க?....மொத்தம் அஞ்சு எலும்புக் கூடுகள் கிடைச்சிருக்குன்னா....அஞ்சு பேரை மர்டர் பண்ணி....உள்ளார வெச்சுப் பூசியிருக்காங்க?...அந்த டைம்ல அந்த அஞ்சு பேரைக் காணோமின்னு கம்ப்ளைண்ட் வந்திருக்குமே...அப்படி வந்திச்சா?...வந்திருந்தா அதுக்கு என்ன ஆக்ஷன் எடுத்திருக்காங்க?...அதையெல்லாம் தோண்டித் துருவி பாத்தீங்களா?....ஹூம்...விஷயம் சி.எம்.வரைக்கும் போயாச்சு!...நாளைக்கு சட்ட மன்றத்துல எதிர்க்கட்சிக்காரங்க பிரச்சினையைக் கிளப்பப் போறாங்க...நம்மள்ல பல பேர் வீட்டுக் போக வேண்டி வரும்!”
“சார்...அந்தக் கட்டிடம் 1989லே...அதாவது கிட்டத்தட்ட இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டிருக்கு!...மைக்ரோ லெவல்ல விசாரிச்சதுல...அந்தக் காம்ப்ளக்ஸோட ஃபர்ஸ்ட் ரெண்டு ஃபுளோர் மட்டும் ஒரு காண்ட்ரக்டர் கட்டியிருக்கார்!...அப்புறம் அவனுக்கும் ஓனருக்கும் டேர்ம்ஸ் ஒத்து வராமப் போக...அவன் கணக்கை முடிச்சுக்கிட்டு வெளியேறிட்டான்...அதுக்கப்புறம்...மூணாவது.... நாலாவது....அஞ்சாவது ஃபுளோரை வேறொரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்காரங்க கட்டி முடிச்சிருக்காங்க!” தீனதயாள் சொல்ல
“சரி...அவனைக் கூப்பிட்டு என்கொயரி பண்ண வேண்டியதுதானே?” கமிஷனர் துருவினார்.
“நோ..சார்...அன்ஃபார்ச்சுனேட்லி...அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனர் இப்ப ஃபாரீன்ல இருக்கார்!...பட்...அவரை உடனே வரச் சொல்லி டிபார்ட்மெண்ட்ல இருந்தே தகவல் அனுப்பிட்டோம்!...நாளைக்கு மார்னிங் ஃபிளைட்ல வந்து இறங்கறார்.”
“ஓ.கே!...அவரை டீப்பா என்கொயரி பண்ணுங்க...பண்ணி முடிச்சதும் ரிப்போர்ட்டை எனக்கு உடனே ஃபார்வெர்ட் பண்ணுங்க...என்ன?”
தொடர்ந்து பலர்..பல விதமான யூகங்களையும் சந்தேகங்களையும் அடுக்கிக் கொண்டே போக அவற்றையெல்லாம் நிதானமாக செவிமடுத்தார் ஏ.சி.தீனதயாள்.
கூட்டத்தின் இறுதியில் மொத்தக் கேஸையும் இன்னும் ஒரே ஒரு வாரத்தில் கண்டுபிடித்தாக வேண்டும் என்கிற அதிரடிக் கட்டளையை ஏ.சி.தீனதயாளின் மீது சுமத்தி விட்டு வெளியேறினார் கமிஷனர்.
தொடரும்...
Next episode will be published on 18th May. This series is updated weekly on Tuesdays.