கூப்பிடத் தெரியவில்லை.... “ரவி மாப்ளை”ன்னு சொல்ல வேண்டியதுதானே?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நிதானமாய் அடி மேல் அடி எடுத்து நடந்து ஹாலுக்கு வந்தாள்.
ரவீந்தர் அவளை புருவங்களை உயர்த்திப் பார்த்தான்.
“உட்காரும்மா” என்ரார் கஸ்தூரி அய்யா.
“இருக்கட்டும்” என்றாள் வத்சலா.
“அட...அவரு வந்த பிறகு இந்த வெட்கத்தையெல்லாம் காட்டு...நம்ம தம்பி முன்னாடி என்ன வெட்கம்?” என்றார் கஸ்தூரி அய்யா.
“விருட்”டென்று தலையைத் தூக்கி ரவீந்தரைப் பார்த்தாள் வத்சலா.
“ஜஸ்ட்...அஞ்சு நிமிஷத்துல வந்திடுவார்” என்றான் ரவீந்தர்.
“யாரு?...யாரு வந்திடுவாங்க?” வத்சலா கேட்க,
“என்ன வத்சலா இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க ஒரு மாப்பிள்ளை வர்றார்!:ன்னு நேத்திக்கு சொன்னேனே?...மறந்திட்டியா?” ரவீந்தர் கேட்க,
பத்தாயிரம் வாட்ஸ் மின்சாரம் தரும் பேரதிர்ச்சியை வாங்கினாள் வத்சலா. “அப்படின்னா ரவீந்தர்...நீ...நீ....மாப்பிள்ளை இல்லையா?” அவள் மனம் கதறியது.
“நம்ம ரவீந்தர் தம்பி உனக்காக....தானே பேப்பர்ல விளம்பரம் குடுத்து ....வந்திருந்த மாப்பிள்ளை வரன்களையெல்லாம் தானே அலசி ஆராய்ஞ்சு...ஒருத்தரை செலக்ட் பண்ணி இன்னிக்கு உன்னைப் பார்க்க வரச் சொல்லியிருக்கு!...” என்றார் கஸ்தூரி அய்யா.
அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் சிலை போல் அமர்ந்திருந்த வத்சலா வாசலில் ஏதோ ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து உள் அறையை நோக்கி நடந்தாள்.
தொடரும்...
Next episode will be published on 11th June. This series is updated weekly on Fridays.