வேண்டியதுதான்!...” தன் நிலைமையை எடுத்துரைத்தான்.
“மத்தவங்க மாதிரியா நானும்?...ஸ்பெஷல் இல்லையா?” அவன் வாயிலிருந்து வேறு எதையோ எதிர்பார்த்தாள்.
“ம்ம்ம்...நீங்க கொஞ்சம் ஸ்பெஷல்தான்!...கவிதையெல்லாம் எழுதறீங்க!...பட்...என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்...இந்த மாதிரியான உறவுகள் எல்லாமே “ரயில் சிநேகிதம்” போலத்தான்!...நீங்க உங்க கல்யாணத்துக்கு மறக்காம எனக்கு இன்விடேஷன் அனுப்புங்க...வாழ்த்துக் கவிதையோட வர்றேன்!”
அதைக் கேட்டதும் சுக்குநூறாய் நொறுங்கிப் போனள் கோகிலா, “ஓ.கே...பை...”என்று சொல்லி விட்டு, இணைப்பிலிருந்து உடனே வெளியேறினாள். கண்ணில் குற்றால அருவி. நெஞ்சில் பாறாங்கல். “பாவி...உன்னோடதான் என் கல்யாணம்!ன்னு நெனைச்சிட்டிருந்த என் கிட்டேயே கல்யாண இன்விடேஷனை மறக்காம அனுப்பு”ன்னு சொல்றானே?”
அதே நேரம், ரவீந்தர் அறையில், “ஹும்...இந்தப் பொண்ணுக்கு கவிதையெல்லாம் எழுதுற அளவுக்கு மெச்சூரிட்டி இருக்கு!...ஆனாலும்...என்னோட நட்பைப் புரிஞ்சுக்கத் தெரியலை!...பாவம்...இதுவும் வீண் கற்பனைகளை மனசுல வளர்த்து வெச்சிருக்கும் போலிருக்கு...என்ன பண்ண?” தனக்குள் சொல்லிக் கொண்டான்.
உள்ளிருந்து அவன் மனசாட்சி ஓங்கிக் கேட்டது, “ஏண்டா ராஸ்கல்...ரெண்டு பொண்ணுக மனசுல காதல் ஆசையை வளர்த்து விட்டுட்டு...இப்ப “ரயில் சிநேகம்...ராக்கெட் சிநேகம்”ன்னு டயலாக் பேசறியா?...பொம்பளை பாவம் உன்னை சும்மா விடாதுடா”
“ஹலோ...மனசாட்சி...என்ன?...என்னையே மிரட்டறியா?...நான் என்னிக்காவது அந்த பொண்ணுக கிட்ட “ஐ லவ் யூ”ன்னு சொல்லியிருக்கேனா?...அவங்களா அப்படி நெனைச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவேன்?”
அவன் சொல்வதும் உண்மைதான், அவன் எந்த சூழ்நிலையும் அந்தப் பெண்களிடம் “ஐ லவ் யூ” சொன்னதேயில்லையே? என்பதைப் புரிந்து கொண்ட மனசாட்சி, மௌனமானது.
மறுநாள் அலுவலகத்தில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக் கொள்ளும் போதுதான் தெரிய வந்தது, அன்று கோகிலா லீவ் என்பது. “ப்ச்...கொஞ்சம் நாளைக்கு அப்படித்தான் இருக்கும்..அப்புறம் நார்மல் ஆயிடும்”
****
அன்று மதியமே கோவையை அடைந்த ரவீந்தர், சென்னை ரயில் ஏறும் முன், முதியோர் இல்லத்திற்குச் சென்று தன் தாயைச் சந்தித்து விடும் எண்ணத்தில், சவேரியர் பாளையத்தில் உள்ள அந்த முதியோர் இல்லம் நோக்கிச் சென்றான்.
“அன்னை தெரசா முதியோர் இல்லம்” என்கிற போர்டினைத் தாங்கிய அந்தக் கட்டிடத்தில்