அழைத்துச் சென்றார்.
முன் அறையிலிருந்த சேரில் அவர்களை அமர வைத்தவர் உள் அறையைப் பார்த்து, “வடிவு...வடிவு” என்று கத்தினார்.
உள் அறையிலிருந்த அவர் மனைவி வேக வேகமாய் வெளியே வந்து முரளியைப் பார்த்ததும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு அவனருகில் சென்று அவனைச் சுற்றிச் சுற்றி வந்து வினோதமாய்ப் பார்த்தாள்.
முரளிக்கு தர்ம சங்கடமாயிருந்தது.
“என்ன வடிவு...நான் சொன்னது சரியா?” மனைவியைப் பார்த்துக் கேட்டார் தங்கவேலு.
“நூத்துக்கு நூறு சரிங்க!...நீங்க சொன்னப்பக் கூட நான் நம்பலை!...இப்ப இந்தப் பையனை நேர்ல பார்த்த பிறகுதான் நம்பிக்கையே வந்திச்சு!” அந்த வடிவு சொல்ல,
குழப்பமாகிப் போன முரளி, “அண்ணே...என்ன அண்ணே?...நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கறீங்க?” கேட்டான்.
“ஒரு நிமிஷம் தம்பி” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்ற அந்த தங்கவேலு வரும் போது கையில் ஒரு சிறிய போட்டோ ஆல்பத்தோடு வந்தார். “இதைப் பாருங்க தம்பி”
முகத்தைச் சுருக்கிக் கொண்டு அதை வாங்கித் திறந்து பார்த்த முரளி, அதிலிருந்த முதல் போட்டோவைப் பார்த்ததும் பேரதிர்ச்சிக்குள்ளானான்.
தொடரும்