(Reading time: 6 - 12 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

ஓஓஓ...அதிர்ந்தார் சுப்ரமணியராஜா.

திடீரென்று ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேக வேகமாய் கைப்பிடிச் சுவரோரம் நடந்து சென்று கீழே எட்டிப் பார்த்தார்.

 “கடவுளே..என்னைக் காப்பாற்ற யாரையாவது அனுப்பு!உள்ளுக்குள் வேண்டினார்.

 “ஹா...ஹா...ஹா... நீ எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாது என்ற இடிக் குரல் அவரது காதுகளில் நாராசமாய் ஒலிக்க

திரும்பிப் பார்த்தார்யாரையுமே காணோம்.

யாரு?...யாரு இப்பப் பேசியது?” நடுங்கும் குரலிலேயே அதட்டினார்.

 “நாந்தாண்டா...நீ?”

அந்தப் பதில் வேற் குரல் தொணியில் தன் வாயிலிருந்தே வந்து விழ பீதியானார் சுப்ரமணியராஜா.

என்னது...எனக்கு நானே பதில் சொல்கிறேனா?”

ஆமாம்டா...ஆமாம்!...இனி உனக்கு எல்லாமே நீதான்!

அந்தக் குரலும் தன் வாயிலிருந்தே வர தனக்கு என்ன நடக்கின்றதென்றே புரியாதவராய் அங்குமிங்கும் ஓடினார்.

ஓடாமல் நில்லுடா!அந்த அதட்டலும் அவர் வாயிலிருந்தே வந்தது.

நின்றார்மெல்லக் கேட்டார், “நீ...நீ யார்?”

 “ஹா...ஹா...ஹா... என்னைத் தெரியலையா?...நாந்தான் முகிலன்!...உனக்காக...நீ செஞ்ச பாவங்களுக்காக அப்பாவியா பலியான முகிலன்!தன் தொண்டை வழியாக இதுவரை வந்தது முகிலன் குரல்தான் என்பது இப்போது அவருக்கு தெளிவாக அடையாளம் தெரிந்தது.

 “சரி..இப்ப என்னை என்ன பண்ணப் போறே?” கேட்டார்.

 “ஹாஹ்ஹா...நான் எதுவும் பண்ண மாட்டேன்!...நீ..நீயேதான் பண்ணிக்கப் போறே!என்றது சுப்ரமணியராஜாவின் வாய் முகிலனின் குரலில்.

 “என்ன...என்ன சொன்னே?...” என்று அவர் நிதானமாய்க் கேட்க கேட்க, அவரையும் மீறி அவரது வலது கை ஆட்காட்டி விரல்அவரது இடது கண்ணருகே போய் நின்றது. சுப்ரமணியராஜா அதைக் கீழிறக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

அந்த ஆட்காட்டி விரல் அடுத்த நிமிடமே அவரது இடது கண்ணிற்குள் நுழைந்து கருவிழியைப் பிடுங்கி வெளியே எறிந்தது.

 “ஆ...ஆ...ஆவாயைப் பிளந்து கொண்டு பெரிதாய் அலறினார்.

அவர் அவ்வாறு வாயைப் பிளந்ததினாலோ என்னவோ அவரது இடது கை சட்டென்று அவரது

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.