வாயினுள் புகுந்து அவரது நாக்கை வெறி கொண்டு இழுத்தது.
ரத்தம் பூசிக் கொண்டு தரையில் வந்து விழுந்தது செந்நிற நா.
தொடர்ந்து கத்த முடியாமல் சுப்ரமணியராஜா நின்ற இடத்திலேயே குதிக்க
அவரது வலது கை அருகே கிடந்த இரும்புக் குழாயை எடுத்து அவரது இடது காலில் ஓங்கி அடிக்க எலும்பு படீரென உடைந்தது.
“பே...பே...” என ஊளையிட்டவாறே தரையில் சாய்ந்தவரின் தலையில் இரும்புக் குழாயால் ஓங்கிச் சாத்தியது வலது கை.
மண்டை இரண்டாய்ப் பிளந்து குருதி வடியும் போது...
பளீரென்று ஏழெட்டு வெளிச்சக் கீற்றுக்கள் அந்த மொட்டை மாடியிலிருந்து விண்ணோக்கிப் பறக்க
அந்த வெளிச்சங்களை தன் ஒற்றைக் கண்ணால் நிலைக் குத்திப் பார்த்தபடியே உயிரை விட்டார் என்.ஆர்.ஐ.சுப்ரமணியராஜா.
தொடரும்...
Next episode will be published on 29th June. This series is updated weekly on Tuesdays.