வந்திருக்கிறார்களா? என்பதை ஆராய்ந்தான்.
“தள்ளி உட்காருங்க...என் சீட் நெம்பர் 55” என்றாள்.
நகர்ந்து அவளுக்கு இடம் கொடுத்த ரவீந்தர் இன்னமும் பிரமிப்பிலிருந்து மீளவேயில்லை. “இப்பத்தான் போட்டோவில் பார்த்தேன் அதற்குள் எதிரில் வந்து நிற்கிறாளே?”
சில நிமிடங்களுக்குப் பிறகு, “சென்னைக்கா?” கேட்டான்.
“ஆமாம்!...” தன்னுடைய பேக்கிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் ஊற்றிக் கொண்டாள்.
“என்ன திடீர்னு சென்னைக்கு?” ரவீந்தர் கேட்டான்.
“ம்...டைரக்டர் ஷங்கர் அடுத்த படத்துல என்னைய ஹீரோயினா புக் பண்ணியிருக்கார்...அதான் போயிட்டிருக்கேன்....எனக்கு ஜோடி...சூப்பர் ஸ்டார்!” என்றாள் தமாஷாய்.
“அய்யய்யோ...அப்ப இனிமேல் நயன்தாரா, ஹன்ஸிகா மோத்வாணி..எல்லோரும் வீட்டுக்குப் போக வேண்டியதுதானா?” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கவலையோடு சொன்னான் ரவீந்தர்.
“ஏன்?” புருவங்களை நெரித்தாள்.
“பின்னே?...நீங்க ஃபீல்டுக்குள்ளார எண்ட்ரி ஆயிட்டா அவங்க நிலை அம்போதானே?...நீங்கதானே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு லேடி சூப்பர் ஸ்டார்”
“என்ன சார்?...கிண்டலா?” தலையைச் சாய்த்துக் கொண்டு செல்லக் கோபத்துடன் கேட்டாள்.
“நீங்க மட்டும் நான் சீரியஸாய்க் கேட்டதுக்கு கிண்டலா பதில் சொன்னீங்க...அதான் நானும் பதிலுக்கு கிண்டலடித்தேன்” கண்களை அகலத் திறந்து சொன்னான்.
அதைக் கேட்டு “கல...கல”வென்று சிரித்தவள், “எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆயிருக்கு...அதான் போறேன்” என்றாள் காவ்யா.
“வாட்?...சென்னைக்கு டிரான்ஸ்பரா?...எனக்குத் தெரியவேயில்லையே?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
“யெஸ்...சஸ்பென்ஸா வெச்சிருந்தேன்!...அதுவும் இந்த டிரான்ஸ்பர் நானா கேட்டு வாங்கியது” என்றாள் காவ்யா சிரித்துக் கொண்டே.
“எதுக்குங்க?....கோயமுத்தூர்ல இருந்த உங்களால் சென்னைல குப்பை கொட்ட முடியாதுங்க!...கிளைமேட் சுத்தமா ஒத்துக்காது!”
“நான் ஏன் இந்த டிரான்ஸ்பரைக் கேட்டு வாங்கினேன்...என்பதற்கான உண்மைக் காரணத்தைச் சொல்லவா?....இல்லை...பொய் சொல்லவா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.
“காந்தி உண்மையே பேசணும்!னு சொல்லியிருக்கார்!...அவர் சொன்ன வேற எதையுமே நாம கடைப்பிடிக்கலை...அட்லீஸ்ட் இதையாவது கடைப்பிடிப்போமே?”