“நாம் செஞ்ச தப்புக்கெல்லாம் தண்டனை வர ஆரம்பிச்சிடுச்சு...” பதட்டமான குரலில் சொன்னார் சுதாகர்ஜி.
“அட...கொஞ்சம் விளக்கமாய்த்தான் சொல்லுங்களேன் ஜீ?”
“அந்த மடத்துக்குளம் பெண்ணை எங்க குலத்துப் பையனுக்கு கோல்மால் பண்ணிக் கல்யாணம் பண்ணி வெச்சோம் அல்ல?...அந்தப் பொண்ணோட அண்ணன்...அவன் பேரு மனோகரன்...அவன் இன்னிக்கு காலைல இறந்திட்டான்”
“ஓ...மை காட்!...ஏன் என்னாச்சு?”
“தோட்டத்துல மோட்டார் போடப் போயிருக்கான்...நேத்திக்குப் பெய்த மழைல மோட்டார் ரூம் ரொம்ப ஈரமாயிருந்திருக்கு...அது தெரியாம இவன் போய் கை வைக்க ஷாக் அடிச்சு...உடல் கருகி செத்திட்டான்”
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தான் ரவீந்தர்.
“என்னப்பா...நான் எவ்வளவு பதட்டமாய்ச் சொல்லிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு சிரிக்கறியே?...நாம செஞ்ச தப்புதான் இந்த அகால மரணத்துக்குக் காரணமோ?ன்னு என் நெஞ்சு பதை பதைக்குது” சுதாகர்ஜி புலம்பினார்.
“ஜீ....உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்!...இந்த அகால மரணத்துக்குக் காரணம் நாம செஞ்ச தப்பு இல்லை...அந்த மனோகரன் செஞ்ச மாபெரும் தப்பு...”
“என்னப்பா சொல்றே?”
“ஜீ...ஆக்சுவலா...அவன் செஞ்ச அந்த மாபெரும் தப்புக்கு....அவனுக்கு தூக்கு தண்டனையே கிடைச்சிருக்கும்...நான்தான் இந்தக் காதல் ஜோடிகள் ஒண்ணு சேரணும் என்பதற்காக அதை மறைச்சு இவனைக் காப்பாற்றினேன்!...இந்த கோர்ட்டுல தப்பிச்சவன்...ஆண்டவனோட கோர்ட்டுல தண்டனை வாங்கிக்கிட்டான்!...விடுங்க ஜீ...எல்லாம் நல்லாவே போய்க்கிட்டிருக்கு..இப்படியே போகட்டும்!...”
“ஓ.கே..ப்பா!...உன் கூடப் பேசினதுல எனக்குக் கொஞ்சம் மனசு ஆறுதலாயிடுச்சு” என்றார் சுதாகர்ஜி
“ஜீ...“விதி ஒரு கதவை மூடும் போது...நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து விடும்!...இதுதான் வாழ்க்கை!..”...வெச்சிடட்டுமா?”
மொபைலை கட் செய்த ரவீந்தரிடம் காவ்யா கேட்டாள், “என்ன பிரச்சினை?...”
“எனக்கு இந்த உலகத்துல எதுவுமே பிரச்சினை இல்லை!...ஏன்னா...“நான் சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பவன் அல்ல...நான் இருக்கும் இடத்தில் சந்தோஷங்களை நிரப்ப நினைப்பவன்” சொல்லி விட்டு அவன் கண்ணடிக்க,