தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 12 - ரேவதி முருகன்
“இவ்வளவு ரகசியமா கல்யாணம் பிக்ஸ் செய்துட்ட அக்கா. ப்ரித்விக்கு நீங்க பொண்ணு பார்க்குறதே எனக்கு தெரியாது. திடீர்னு கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு போன் வருது?,” என அனுபல்லவி தன் அக்கா அனுராதாவிடம் அலுத்துக் கொண்டாள்.
அனுராதா தங்கையின் புலம்பலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“கல்யாணம்னாலே இப்படி தானே பல்லவி. நாம நினைக்குற மாதிரி நடக்காது. திடீர்னு நடந்திரும். உனக்கோ எங்களுக்கோ யாருக்கும் வேலை வைக்காம ப்ரித்வியே பொண்ணு பார்த்துட்டான்,” என தங்கைக்கு விளக்கம் கொடுத்தாள்.
“ப்ரித்வியே பார்த்தானா? அப்போ லவ் மேரேஜா? ... ்தி சுகன்யா, மற்றும் அவர் மகள்களுடன் கதை அளந்துக் கொண்டிருந்தாள். ப்ரித்வியுடன் அவன் சித்தப்பா பத்ரிநாத் மற்றும் நண்பர்கள் மூன்றுப் பேர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...