தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 01 - சுபஸ்ரீ
ஹாய் பிரெண்ட்ஸ்,
காதல் முகம் கண்டுகொண்டேன் என்னும் என் புதிய தொடர்கதையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
இது காதல், குடும்பம் சார்ந்த ஜாலியான கதை.
படித்து மகிழுங்கள்,
நன்றி
சுபஸ்ரீ
காதல் முகம் கண்டுகொண்டேன் - 01
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என ஐயர் நாதஸ்வர கோஷ்டி பக்கம் கைக்காட்டினார். பின்பு ”மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா” என மந்திரத்தை சொல்லிக் கொண்டே தாலி வைத்தருந்த பெரிய வெள்ளிதட்டை மாப்பிள்ளை முன் நீட்டினார்.
அதில் வெற்றிலை பாக்கு பூ மஞ்சள் குங்குமம் போன்ற மங்கள பொருட்கள் இருந்தன. தேங்காய் ஒன்றில் முழுவதுமாக மஞ்சள் தடவி நான்கு பக்கம் குங்குமம் வைத்து அதன் மேல் தாலி வைக்கப்பட்டிருந்தது.
அழகான தங்க தாலி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசி. மணமக்கள் வீட்டினரின் முன்னோர்கள் ஆசிகள் பெற பூஜைகள் செய்வித்து பின்பு திருமண மண்டபத்தில் கூடியிருக்கும் அத்தனை பெரியவர்களின் ஆசிர்வாதமும் பெற்ற திருமாங்கல்யம்.
மங்கள வாத்தியம் இசைக்க . . . தேவ மந்திரம் ஒலிக்க ராகவன் தாலியை எடுத்து பத்மினி கழுத்தில் பூட்டினான். அந்த நொடிமுதல் வேறு வேறான இருநபர்கள் கணவன் மனைவி என்னும் புனிதமான பந்தத்தில் இணைந்தனர்.
திருமணமண்டபத்தில் அனைவரும் பூவும் அட்சதையும் அவர்கள் மேல் பூமாரியாக பொழிந்தனர். ஆனால் மணமக்களான ராகவன் மற்றும் பத்மினி மணவறையில் ஏதோ பஸ்சில் பக்கத்து பக்கத்து இருக்கையினர் போல் அமாந்திருந்தனர்.
மணமக்களின் பெற்றோர் இதயம் ஆனந்தத்தில் திளைத்தது. மணமகன் வீட்டாருக்கு மேலும் ஒரு நபரால் தங்கள் குடும்பம் முழுமை அடைந்தது என்னும் நிறைவு.
மணமகள் வீட்டாருக்கு தங்கள் பெண் தங்களைவிட்டு பிரிய நேரிடும் என்பது வேதனை அளித்தாலும். ஒரு பெண்ணாய் அவள் மனைவி தாய் என்று வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல போகிறாள் என்பதில் இன்பமே.
இரவு ஏழு மணிக்கு கல்யாண ரிசப்ஷென். விவரம் தெரிந்த யாரும் ஏழு மணிக்கு வர