பொங்கினான்.
“இன்னொரு மணிரத்னம் . . ஷங்கர் . . பாரதிராஜாவா நீ வந்தா சந்தோஷப்படற முதல் ஆள் நாங்கதாண்டா” என்றார் விசு.
கோதாவரி அரவணைப்பாக அவன் அருகில் அமர்ந்து தலைக் கோதினார்.
குளிர்ந்து போனான் ராகவன்.
“என்ன இருந்தாலும் கையில ஒரு டிகிரி இருந்தா நல்லா இருக்கும் இல்லயா? . . . ” மீண்டுமாய் விசு கேட்டார்
என்ன சொல்வதென்று தெரியாமல் ராகவன் குழம்பினான்.
“சரிப்பா ஒரே நாள்ல டைரக்டர் ஆக முடியுமா? சொல்லு” கேட்டார்.
“அது எப்படிப்பா”
“கரெக்ட் . . . முதல்ல பி.ஈ. படிச்சி முடி அடுத்த நாளே . . . உனக்கு எது பிடிக்குமோ அது செய் . . . என்ன இருந்தாலும் கைல படிப்பு இருந்தா தெம்பா இருக்கலாம் இல்லையா?”
“ஆமாம்பா” அரைமனதோடு சென்றான்.
ராகவன் விஷவல் கம்யூனிக்கேஷன் படிக்க நினைத்தான். ஆனால் பெற்றோருக்காக பி.ஈ.யில் சேர்ந்து படித்தான்.
விசுவிற்கு நன்கு தெரியும் விடலை பருவத்தில் செய்ய வேண்டாம் என்பதை தான் செய்வார்கள் என்று. அதனால் நயமாக பேசி பி.ஈ.யில் சேர்த்தார்.
பெற்றோர் என்றும் தங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சினிமா டைரக்டர் என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்று எத்தனை பேர் கனவுகளோடு கோடம்பாகத்தை சுற்றிவருகின்றனர்.
ஆயிரம் பேர்களில் ஐவர் கனவுதான் நினைவாகிறது. படிப்பு என்று ஒன்று இருப்பது மிக அவசியம் என்பது அவர் எண்ணம். டைரக்டர் ஆவதற்கு முன் டிகிரி எடுக்க வைத்தார். அதன் பிறகு அவன் விருப்பம். படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் அவன் கஷ்டப்படக் கூடாது என்பது அவர் எண்ணம்.
ராகவன் பி.ஈ. இறுதி ஆண்டின் கடைசி செமஸ்டரக்கு தயார் செய்துக் கொண்டிருந்தான். பி.ஈ முடித்ததும் தனக்கு விடுதலை என ஒருவகை சந்தோஷம் உந்த . . . அதன் விளைவாக அரியர்ஸ் இல்லாமல் இதுவரை படித்தான்.
அப்போது பெரிய ஐ.டி. நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தினார்கள்.
“இன்டா்வியூ அடெண்ட் பண்ணுடா . . . நாளைக்கே வேலை கொடுக்கப் போறாங்களா என்ன?” விசு சொல்ல
தனக்கு வேலை கிடைடக்க கூடாதென என எல்லா தெய்வங்களையும் வேண்டினான்.