தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 15 - முகில் தினகரன்
மறுநாள் காலை பதினோரு மணியிருக்கும்,
வேலைகளை முடித்து விட்டு சோபாவில் வந்தமர்ந்த ஜெகதாம்பாள் கண்களில் டீப்பாயின் மீது கிடந்த அந்த செய்தித்தாளும், அதில் போடப்பட்டிருந்த அவள் மகன் கோகுலின் புகைப்படமும் பட, புருவங்களை நெரித்துக் கொண்டு அதை எடுத்துப் பார்த்தாள்.
ஒரு கட்டத்திற்குள் கோகுலின் புகைப்படமும், அதன் கீழே
“கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்
திரு சிங்கமுத்து அவர்களின் மகன்
திரு.எஸ்.கோகுல் அவர்கள் 24.04.2019
(ஞாயிறு) அன்று அகால மரணமடைந்தார்
என்பதை இதன் மூலம் தெரிவித்துக்
கொள்வதோடு, அன்னாரின்
இறுதிச் சடங்குகள் சுந்தராபுரம்
பிள்ளையார் கோயில் வீதியில்
உள்ள அவர்களது இல்லத்தில்
நடைபெறும். பின்னர்
சுந்தராபுரம் மயானத்தில்
அடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.”
என்கிற செய்தியும் பிரசுரமாகியிருக்க,
நிதானமாய் அதைப் படித்தாள் ஜெகதாம்பாள். பின்னர் இன்னொரு செய்தித்தாளை எடுத்துப் பார்த்தாள். அதிலும் அதே போன்ற அஞ்சலி செய்தி வெளியிடப்பட்டிருக்க, எல்லா பேப்பர்களையும் மீண்டும் டீப்பாயின் மீது வைத்து விட்டு, மேலே சுழலும் மின் விசிறியையே நிலைக் குத்திப் பார்த்தபடி அமர்ந்தாள்.
அவள் மூளைக்குள் சிந்தனை வண்டுகள் தாறுமாறாய்ப் பறக்கத் துவங்கின. சாவு தினத்தன்று மகனின் போட்டோவை வைத்துக் கொண்டு தான் அழுதது ஞாபகத்தில் வர, “நான் கோகுலின் உயிரற்ற உடலைப் பார்த்தேனா?...இல்லையே?....ஏன் பார்க்கலை?” தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
நீண்ட நேரம் மின் விசிறியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் பார்வை மெல்ல