தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 07 - சசிரேகா
இளமதிக்கு ஒவ்வொரு நொடியும் குதூகலமாக இருந்தது, பல நாள் கனவு நினைவாகிவிட்டதென நினைத்து மகிழ்ந்தாள், நந்தாவுடன் தான் வாழப்போகும் வாழ்க்கையை பற்றிய கற்பனையை கூட காணத் தொடங்கிவிட்டாள், அவள் சதுரங்கம் விளையாடி ஜெயித்து ரகுவை விரட்டிவிட்டதில் களைத்துப் போய் உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறினாள்.
பெரிய பெண்ணான காரணத்தால் பாவாடை தாவணியைதான் இனி அணிந்துக் கொள்ள வேண்டும் என பாட்டி சொன்னதற்காகவே அவளுக்கு பொருந்தும் நிறத்தில் இருந்த பாவாடை தாவணியை அணிந்துக் கொண்டாள். அந்த அறையில் இருந்த டரஸ்ஸிங் டேபிள் நிலை கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்து பிரமித்தாள். இத்தனை நாள் விட இன்று அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தும்தான் தாமதம் தானாக அவளுக்கு வெட்கம் வர அவளின் குண்டு கன்னம் சிவக்கும் அளவு நாணியதுடன் தனது உடலையும் நெளித்துக் காட்ட நந்தாவிற்கு என்னமோ போல் ஆனது, ஒரு நொடி அவனது மனது கட்டுக்கடுங்காமல் போனது