அடுத்த ஒரு மணி நேர விவாதத்தில் தாத்தா முழு தோல்வியை சந்தித்தார். மறுநாள் இரவு அவர்கள் கிளம்ப வேண்டும் என்பது உறுதியானது.
“அம்மா பசிக்குது . .” என தனுஷ் சாப்பிட சென்றுவிட்டான்.
“பத்த வெச்சிட்டியே பரட்ட” என சஞ்சய் கண்ணடித்தான்.
“சும்மா இரு ” என தனுஷ் கண்ணை உருட்டி செல்லமாய் மிரட்டினான் தம்பியை.
இரவு முழுவதும் தனுஷ் சரியாக உறக்கம் வராமல் தவித்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் சஞ்சையை விட்டுவிடக் கூடாது என தனக்கு தானே சபதம் ஏற்றான்.
விமலின் தம்பி சஞ்சய் தானா என தெரியாமல் எதற்கு பயப்பட வேண்டும்? வேறு எவரேனும் கூட இருக்கலாம் என அவனே கேள்வியும் கேட்டு திருப்தியில்லா பதிலையும் சொல்லிக் கொண்டான்.
மறுநாள் அலுவலகம் சென்றதும் மறைமுகமாக விமலுக்கு நிறைய வேலைகளை கொடுத்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் விமல் எங்கும் நகராதபடி செய்வித்தான். அவனை வேறு கிளைக்கு மாற்ற வேண்டும் என திட்டமிட்டான். வாழ் நாள் முழுவதும் தாத்தா விமலை சந்திக்கக் கூடாது. இப்படி பல திட்டங்கள் அவன் மனதை ஆக்கிரமித்தது.
வீட்டில் பாட்டி அமர்க்களம் செய்த வண்ணம் இருந்தார். இரண்டு பெட்டி நிறைய புடவைகளை அடுக்கி வைத்திருந்தார்.
“ஒரு வாரத்துக்கு எதுக்கு இத்தன புடவை?” தாத்தா கேட்க