தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 13 - நவ்யா
விஸ்வநாதனும் ஜனனியிடம் தடை இல்லாது பகிர்ந்தார்.
“மழை கொட்டிட்டு இருந்த நாள், எதையோ வாங்கனும்னு அம்மாவும், மகளும் கடைக்கு கிளம்பினாங்க. அப்போ நடந்த விபத்துல டிரைவரும், என் மனைவியும் அங்கேயே இறந்துட்டாங்க. காருண்யாவை காயத்தோட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தாங்க. அவ கண்ணு திறக்கவே மூணு நாளு ஆச்சு. அதுக்கு அப்புறம் தான் நடந்த விபத்துல காருண்யாவோட கர்பப்பை சேதமாகிடுச்சுன்னு தெரிய வந்தது. காருண்யாக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.
எனக்கு அது பெரிய விஷயமா படலை. என் மகளாவது பிழைச்சாளேன்னு சந்தோஷம் தான் இருந்தது. காருண்யாக்கு அப்படி கிடையாதுன்னு அவளுக்கு கல்யாணத்துக்கு நான் பார்க்க ஆரம்பிச்சப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
துன்னு நான் முடிவு செய்திருந்தேன். அதுக்கு ஏற்ப என் மகளோட நிலைமை தெரிஞ்சும் கல்யாணம் செய்தா என் கம்பெனியை அந்த பையன் பேருக்கு மாத்துறதா சொல்லி வரன் தேடினேன். இதை தப்புன்னு என் முகத்துக்கு நேரா சொன்னது தர்மா தான்!”
“அவரும் நீங்க காருண்யாக்கு பார்த்த அலையன்ஸ்ல ஒருத்தரா சார்?” என வினவினாள் ஜனனி.
“இல்லை ஜனனி. தர்மாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்.